Tamil Bayan Points

எறும்புகளின் அறிவாற்றல்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on October 11, 2016 by Trichy Farook

எறு‌ம்புக‌ளி‌ன் தலை‌ப்பகு‌தி‌யி‌ல் ஆ‌‌ன்டெனா எ‌ன்ற உறு‌ப்பு உ‌ள்ளது. இத‌ன் மூல‌ம் ஒ‌லி, சுவை, வாசனை ம‌ற்று‌ம் தொடு உண‌ர்வு ஆ‌கியவ‌ற்றை அ‌றி‌கி‌ன்றன.

எறு‌ம்புக‌ள் ஒ‌ன்றை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி ஒ‌ன்றாக செ‌ல்லு‌ம் சுபாவமுடையவை. இவை பு‌ற்றுகளை‌க் க‌ட்டி வ‌சி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் உடையவை. ‌சில வகை எறு‌ம்புக‌ள் 15 அடி உயர பு‌ற்றுகளை‌க் கூட‌க் க‌ட்டு‌ம் ‌திற‌ன் வா‌ய்‌ந்தவை.

எறு‌ம்புகளு‌க்கு க‌ண்க‌ள் ‌மிக‌த் து‌ல்‌லியமாக‌த் தெ‌ரியு‌ம். மேலு‌ம் உழை‌ப்ப‌தி‌ல் எறு‌ம்புகளு‌க்கு ஈடு இணை எதுவு‌ம் வராது. சொ‌ல்ல‌ப் போனா‌ல் எறு‌ம்புக‌ள் அத‌ன் எடையை‌ப் போல 20 மட‌ங்கு எடையை‌‌க் கூட‌த் தூ‌க்‌கி‌ச் செ‌ல்லு‌ம் ‌திற‌ன் பெ‌ற்‌றிரு‌க்கு‌ம்.

ஒரு வகை எறும்பு இனத்தில் தொழிலாளி எறும்புகள் குளிர் காலங்களில் பிற எறும்புகளின் உணவுக்காகச் சின்னச் சின்ன வித்துக்களை இழுத்து வந்து புற்றுக்களில் சேர்க்கின்றன. புற்றுக்குள் தானியங்கள், வித்துக்கள் போன்றவற்றை அரைப்பதற்கென்றே ஒரு கிடங்கை அந்த எறும்புகள் உருவாக்குகின்றன.

அங்கே குடியிருக்கும் எறும்புகளுக்கு தானியங்களை அரைத்து உண்ணுவதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகள் செய்து தருவதற்கான பொறுப்பை, பெரிய தாடைகளையுடைய சில எறும்புகள் ஏற்றுக் கொள்கின்றன. அது ஒன்று தான் அந்த எறும்புகளின் வேலை. இலையுதிர் காலம் வரும் போது அந்தக் கிடங்கிலுள்ள எல்லா தானியங்களும் அரைத்து முடிக்கப்பட்டு விடுகின்றன. இப்போது பெரிய எண்ணிக்கையுடைய அந்த எறும்புகளின் தலை சிறந்த பணி முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த உணவைப் பாதுகாப்பது ஒன்று தான்.

இன்னும் சில வகை எறும்புகளை அவற்றின் உள்ளுணர்வோ அல்லது அறிவுத் திறமோ எதுவோ ஒன்று அவற்றின் உணவுக்காகவும் வசிப்பதற்காகவும் புல் வீடுகளை வளர்க்கச் சொல்லித் தூண்டுகின்றது. புல்லால் ஆன அந்தக் குடில்களே அவற்றிற்கு உணவாகவும் பயன்படுவதால் அவற்றைத் தோட்ட வீடுகள் என்றும் சொல்லலாம்.

அவை தேன் கூடுகளுக்கு இடர் விளைவிக்கும் சில குறிப்பிட்ட கம்பளிப் புழுக்களையும் பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. அந்தப் புழுக்களும் பூச்சிகளும் தான் அவற்றுக்கு மாமிசம் வழங்கும் ஆடு மாடுகளாகும். அந்தப் புழுக்களிலிருந்து தேனைப் போல் வடியும் ஒரு திரவத்தையும் அந்த எறும்புகள் உணவாகக் கொள்ளுகின்றன.

சில எறும்புகள் அவற்றிலேயே சிலவற்றைப் பிடித்துத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்கின்றன. வேறு சில எறும்புகள் தமக்குக் குடில் அமைத்துக் கொள்ளும் போது இலை தழைகளை தமக்குத் தேவையான பருமனுக்கு ஏற்ப வெட்டிக் கொள்கின்றன.

சில தொழிலாளி எறும்புகள் ஓய்வாகத் தமது கை, கால்களை ஓரிடத்தில் கிடத்திக் கொண்டு படுத்து விடும் போது, பட்டுப் புழுக்களைப் போல் பட்டு நூல் நூற்கவும் அவற்றால் நெய்யவும் தெரிந்த கூடுகளில் வாழும் ஒரு வகைச் சிற்றெறும்புகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. சில குட்டி எறும்புகளுக்கு அவற்றுக்கான கூடுகளை உருவாக்கிக் கொள்ளத் தெரியாத போது அதன் சமுதாயம் பாடுபட்டு அதற்காக ஒரு கூட்டை உருவாக்கித் தருகின்றது.

சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்று பெரிய கரிய கட்டெறும்பு, மரத்திலிருக்கும் வெளிர் சிகப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு இவைதான் நமக்குத் தெரிந்த எறும்பு வகைகள். ஆனால் உலகில் 11,931 வகையான எறும்புகளும், இதில் 5.2 சதவிகிதம் வகைகள் இந்தியாவிலும் உள்ளன.

இந்த பூமிப் பந்தில் எறும்புகள் இல்லாத இடம் மிகக் குறைவு. எறும்புகள் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. அண்டார்டிகா போன்ற துந்திர பிரதேசங்களைத் தவிர பூமியின் பல இடங்களில் எறும்புகள் பரவி காணப்படுகின்றன. ஆயினும் எறும்பு வகைகள் அதிகமாக இருப்பது பூமத்திய ரேகைக்கு அருகாமையிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில்தான். இப்பகுதிகளில் உள்ள யானை, புலி, ஒட்டகச் சிவிங்கி இன்னும் பல தரைவாழ் விலங்குகள் அனைத்தையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து, மற்றொரு தட்டில் எறும்புகள் அனைத்தையும் வைத்தால், எறும்புகள் உள்ள தட்டுதான் எடை தாங்காமல் கீழே இறங்கும்! உருவத்தில் சிறியதாக இருந்தாலும். எண்ணிக்கையில் அபரிமிதமாக இருப்பவை எறும்பினங்கள்.

நம் வீடுகளில், தோட்டங்களில், காடுகளில் என எறும்புகள் எங்கெங்கும் வியாபித்துள்ளன. காட்டில் தரைப்பகுதியிலும், மரங்களிலும், மர விதானங்களிலும் வாழ்கின்றன. பெரும்பாலும் சர்க்கரை உள்ள பொருள்களை எறும்புகள் உணவாகக் கொண்டாலும், பல வேளைகளில் மற்ற சிறிய உயிரினங்களை வேட்டையாடவும், இறந்து போன உயிரினங்களையும், விதைகளையும், மற்ற தாவர உறுப்புகளையும் சாப்பிட்டு வாழ்கின்றன. எறும்புகள் உணவுச் சங்கிலியின் முக்கியமான அங்கம். பறவைகள், சில பாலுட்டிகளுக்கு எறும்பு ஒரு முக்கிய உணவாக இருக்கிறது.

சமூக வாழ்க்கை

எறும்புகள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வாழ்பவை. இவற்றின் சமூக வாழ்வு வியக்கத்தக்கது. ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒன்றாகக் கூடி கூட்டைப் பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டையிடுவது, இனப்பெருக்கம் செய்வது, கூட்டை சுத்தம் செய்வது, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது என வேலைகளை பகிர்ந்து கொள்கின்றன. அவை செய்யும் வேலையை வைத்து வேலைக்கார எறும்பு, இனப்பெருக்கம் செய்ய முடியாத பெண் எறும்பு, எதிரிகளிடகமிருந்து கூட்டை காக்கும் சிப்பாய் எறும்பு, முட்டையிடும் பெண் எறும்பு அல்லது ராணி, இறக்கையுள்ள ஆண் எறும்பு என இனம் பிரிக்கலாம்.

நாம் வெளியில் காணும் எறும்புகள் அனைத்தும் வேலைக்கார எறும்புகள்தான். இவற்றில் சில உருவத்தில் வேறுபட்டு காணப்படும். உருவத்தை வைத்து அவை செய்யும் வேலைகளையும் அறிந்துகொள்ள முடியும். உருவத்தில் மிகச் சிறிய வேலைக்கார எறும்புகள் பெரும்பாலும் கூட்டைவிட்டு வெளியே வருவதில்லை. ராணிக்கு சேவை செய்வது, முட்டைகளையும், வேற்றிளரிகளையும் (லார்வா) பராமரிப்பதே இவற்றின் வேலை. ராணியை காண்பது அரிது. அது கூட்டுக்குள்ளேயே இருக்கும். அதேநேரம், இனப்பெருக்க காலங்களில் இறக்கையுள்ள ஆண் எறும்புகள் கூட்டைவிட்டு வெளியில் பறந்து செல்லும்போது பார்த்திருக்கலாம்.

 

இனப்பெருக்கம் மற்றும் கூடமைத்தல்

நன்கு முதிர்ந்த எறும்புக் கூட்டம், இனப்பெருக்கம் செய்யும் திறனைக் கொண்ட இறக்கையுள்ள ராணி மற்றும் ஆண் எறும்புகளை வளர்க்கிறது. இவை முழு வளர்ச்சியடைந்தவுடன் புதிதாக தமக்கென ஒரு குடும்பத்தை அமைக்க வளர்ந்த கூட்டைவிட்டு வெகுதூரம் பறந்து செல்கின்றன. இதற்கு கலவிப் பறப்பு (Nuptial flight) என்று பெயர். அதேவேளையில் ஆண் எறும்பை கவர்வதற்காக ராணி எறும்பு ஒருவித இனஈர்ப்புச் சுரப்பை (Pheromone) தனது உடலிலிருந்து வெளியிடுகிறது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் எறும்புகளைக் கவரும். இவை தமக்குள் சண்டையிட்டு, வலுவான ஆண் எறும்புகள் ராணியுடன் இணைசேர்கின்றன. இணைசேர்ந்த பின் ஆண் எறும்புகள் இறந்து போகின்றன.

எறும்பின் முட்டை வெள்ளை நிறத்தில், நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். வீடுகளில் அம்மியையோ அல்லது பெரிய பாத்திரத்தையோ நகர்த்தும்போது அவற்றின் கீழ் கருப்பு நிற பிள்ளையார் எறும்பு கூடமைத்து இருந்தால், வெள்ளை நிறத்தில் இருக்கும் முட்டைகளை வாயில் கவ்விக்கொண்டு அவை வேறு இடத்துக்குச் செல்வதை பார்த்திருக்கலாம்.

முட்டையிலிருந்து இரண்டு நாள்களில் வேற்றிளரி (லார்வா) வெளிவரும். இவற்றுக்கு ஊட்டச்சத்து மிகுந்த எச்சில் போன்ற திரவத்தை ஊட்டி ராணி வளர்க்கும். இவை கூட்டுப்புழுவாகி முழு வளர்ச்சியடைந்த வேலைக்கார எறும்பாக பிறக்கும். இதன்பின் ராணிக்கு எந்த வேலையும் வைக்காமல், அவை வெளியே சென்று உணவு தேட ஆரம்பிப்பது, கூட்டை பராமரிப்பது முதலான எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்யத் தொடங்குகின்றன. ராணியின் ஒரே வேலை முட்டையிட்டு தனது குடும்பத்தை விரிவாக்குவது மட்டுமே.

வேலைக்கார எறும்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மண்ணுக்கு அடியில் படிப்படியாக அவை கூட்டை விரிவுபடுத்தத் தொடங்குகின்றன. முட்டைகளை வைத்துப் பாதுகாக்க, அதிலிருந்து வரும் வேற்றிளரிகளையும், கூட்டுப்புழுக்களையும் வைக்க, உணவை சேமித்து வைக்க என தனித்தனி அறைகளை அவை உருவாக்குகின்றன. இவ்வாறு கூடு பெரிதான பிறகு சில ஆண்டுகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இறக்கையுள்ள ஆணும், பெண்ணும் அக்கூட்டில் வளர்க்கப்பட்டு, முதிர்ச்சியடைந்த பின் அவை வெளியே பறந்து சென்று வேவ்வேறு இடங்களில் தங்களுக்கென ஒரு புதிய கூட்டை உருவாக்கிக் கொள்கின்றன.

தகவல் பரிமாற்றம்

நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், சற்று நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டம் வந்து சேர்வதைக் காணலாம். இது எப்படிச் சாத்தியமாகிறது? உணவு இருப்பதைப் பார்க்கும் ஓர் எறும்பு அத்துகளின் அருகில் வந்து தனது உணர்நீட்சிகளால் (Antenna) அதை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து செல்லும்போது தனது உடலின் பின்பகுதியிலிருந்து ஒருவித வேதிப்பொருளை தரையில் கோடு போல் தனது கூடு வரை ஆங்காங்கே இட்டுச் செல்கிறது. இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தைப் பின்பற்றி உணவு இருக்குமிடத்தை அடைகின்றன. இந்தத் தடம் எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும்.

 

வழிகாட்டியவன் யார்?

எந்த உயிரணுக்களிலிருந்து எறும்புகள் உருவாகின்றனவோ அவற்றிடம் இந்தச் சிக்கல் நிறைந்த பணிகள் எல்லாம் எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன?

நிச்சயம் அங்கே அவற்றிற்கெல்லாம் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இத்துடன் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் அவர்களின் “அறிவு, இறை நம்பிக்கையைத் தூண்டுகிறது’ என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்கள் முடிகின்றன.

ஆம்! நிச்சயம் அந்த எறும்புகளுக்கும் அவைகளல்லாத சிறிய, பெரிய பிற படைப்புகளுக்கும் ஒரு படைப்பாளன் இருக்கிறான்; அவன் தான் அவற்றைப் படைத்து அவற்றிற்குச் சரியான வழியையும் காட்டுகின்றான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:2, 3

அந்தப் பேராசிரியரின் நூலிலிருந்து நாம் அளித்த எடுத்துக் காட்டுக்கள் உயிரினங்கள், பறவைகள், புழு பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றின் உலகங்களைப் பற்றி மனிதன் பதிவு செய்து வைத்திருக்கின்ற ஆய்வுகளின் ஒரு சிறிய பகுதி தான். இவையல்லாமல் இவை போன்ற இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளின் தொகுப்புகள் இருக்கின்றன.

நம் கண்களுக்குத் தெரிகின்ற இந்த மிகப் பெரும் பிரபஞ்சத்தைப் பற்றி மிகக் குறைவிலும் குறைவாகத் தான் நாம் தெரிந்திருக்கிறோம். அதனையும் தாண்டி இன்னும் எத்தனையோ உலகங்களும் இருக்கின்றன. சாமானியமான நமது மனிதப் படைப்பு புரிந்து கொள்ள முடியுமான அளவுக்கு மட்டுமே இறைவன் அவற்றைப் பற்றி நமக்கு அறிவிக்கின்றான்.