Tamil Bayan Points

ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on November 9, 2021 by

ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்

உலகெங்கிலும் பெண்களின் ஒழுக்க வாழ்க்கை சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கையில் சவூதி அரேபியாவில் ஓரளவுக்குப் பெண்களின் கற்பு நெறியும் கட்டுப்பாடும் காக்கப்பட்டு வருகின்றது. அதற்குக் காரணம் கொஞ்ச நஞ்சம் அங்கே இருக்கின்ற இஸ்லாமிய நெறி தான். இந்த இஸ்லாமிய நெறியைக் கழுத்து நெறிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் முயற்சியைக் கையாண்டு வருகின்றன.

சவூதியில் பெண்களுக்குரிய அனைத்து சுதந்திரமும் கிடைப்பதில்லை; காரணம் அங்கு ஜனநாயகம் இல்லை என்று மேற்கத்திய நாடுகள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூக்குரல்களுக்கும் கூப்பாடுகளுக்கும் பயந்து குவைத் போன்ற நாடுகளில் பெண்களும் அரசியலில் குதிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கும் வாசல் திறக்கப்பட்டு விட்டது. சவூதியிலும் பெண்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் சவூதி மன்னர் அனுமதி வழங்கியிருக்கின்றார்.

ஏற்கனவே சவூதியைச் சுற்றியுள்ள நாடுகள் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் பெண்களுக்குரிய ஆடைகளில் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. இந்தச் சீரழிவு சவூதியையும் பாதிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் (27-2012) அன்று தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் பின்வருமாறு கருத்தை வெளியிட்டிருந்தது.

சவூதி தனியார் பள்ளிக்கூடங்களில் பெண் மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சவூதியின் கிழக்கு மாகாணப் பகுதிகளில் அரசுப் பள்ளிக்கூடங்கள், மாணவிகளுக்கான விளையாட்டுக்களை பகிரங்கமாகவே ஊக்குவிக்கின்றன. சவூதியில் பெண்கள் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்வதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அனுமதியில்லை.

இப்படி ஒரு காலகட்டத்தில் சவூதி மகளிர் பள்ளிக்கூடங்களில் கூடைப்பந்து விளையாட்டுக் கம்பங்கள், வளையங்கள் நட்டப்பட்டு வருகின்றன. தடையை மீறி நடைபெறும் இந்த ஏற்பாடுகள் சவூதியில் வீசுகின்ற காற்றின் திசை மாற்றத்தை அறிவிக்கின்றன.

இதுவரையில் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பெண்களை அனுப்பாத நாடுகள் சவூதி அரேபியா, கத்தார், புருணை ஆகிய மூன்று நாடுகள் தான். இவற்றில் கத்தாரும் புருணையும் இவ்வாண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பெண்களை அனுப்ப இசைந்துள்ளன.

இவை இவ்வாறு முன்வந்ததற்குக் காரணம், “உங்கள் நாட்டுப் பெண்களையும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பவில்லை என்றால் உங்கள் நாடு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்படும்; ஆண்களை மட்டும் போட்டிக்கு அனுப்பி விட்டுப் பெண் வீராங்கனைகளை விளையாட்டுக்கு அனுப்பாமல் விடுவது பாரபட்சமான, அநீதியான நடைமுறையாகும். எனவே இந்தப் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது” என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கைக்கு இவ்விரு நாடுகளும் பணிந்து விட்டன. சவூதி இன்னும் பணிய மறுக்கின்றது. அதனால் சவூதிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்.

இது தான் இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தீட்டியுள்ள தலையங்கத்தின் சாராம்சம்.

இன்றைக்கு விளையாட்டு என்ற சாக்கில், சுதந்திரம் என்ற போர்வையில் பெண்களை ஆடவிட்டு அவர்களது அங்க அவயங்களை அங்குலம் அங்குலமாக ரசிக்கின்ற ஆண் வர்க்கத்தின் ஆதிக்க வெறியின் உச்சக்கட்ட அறிவிப்பு தான் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் இந்த எச்சரிக்கை!

சவூதியில் உள்ள பெண்கள் மட்டும் தங்களின் உடல் அழகை எங்களின் காமக் கொடூரக் கண்களுக்கு விருந்து படைக்க முன்வருவதில்லை என்று ஏங்குவோர் எழுப்புகின்ற எக்காளக் குரல் தான் இந்த எச்சரிக்கை!

டென்னிஸ் விளையாடுகின்ற ஆண்களின் ஆடையையும் அதே விளையாட்டை விளையாடும் பெண்களின் ஆடையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்களின் வக்கிர புத்தியைப் புரிந்து கொள்ளலாம்.

ஆண் வீரர்கள் முட்டுக்கால் வரை கீழாடையும் கழுத்தை ஒட்டி மேலாடையும் அணிந்து விளையாடுகின்றனர். ஆனால் டென்னிஸ் விளையாடும் பெண்களோ பின்பக்கம் தெரியும் அளவுக்குக் குட்டைப் பாவாடையும் மார்பு தெரியும் அளவுக்கு டி-சர்ட்டும் அணிந்து கொண்டு ஆபாச ஆட்டம் போடுகின்றனர். பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக்கி அவர்களை ரசிக்க நினைக்கும் ஆணாதிக்க வெறியர்களின் சபலத்தை இதிலிருந்து அறிய முடியும்.

இந்தியாவில் சமீபத்தில் பிரபலமாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பெண்களுக்கு இடமில்லை என்பதால் “சியர் கேர்ல்ஸ்’ எனப்படும் ஆபாச நடனக்காரிகளை மைதானத்தில் ஆடவிட்டு அழகு பார்க்கின்றனர். காபரே நடனத்தை மிஞ்சும் இந்தக் காம நடனத்தை கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யும் கொடுமையும் நடக்கின்றது.

அன்றாடம் உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை பன்மடங்குப் பரிமாணங்களாகப் பெருகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணமே பெண்களின் ஆபாசமான அரை நிர்வாணமான ஆடைகள் தான்.

இவை தான் இந்த வன்கொடுமைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. அதனால் தான் இஸ்லாம் அதற்கு ஒரு கடிவாளத்தையும் கட்டுப்பாட்டையும் விதிக்கின்றது. இது சவூதியில் பேணப்படுகின்றது. இதற்குக் காரணம் அங்குள்ள ஷரீஅத் சட்டம். இதன் காரணமாகத் தான் அங்கு பாலியல் வன்கொடுமைகளின் விகிதாச்சாரம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

அதுபோன்று பெண்களைப் பகிரங்கமாக ஆடவிட்டு, அழகை வியாபாரமாக்கும் பக்கா விபச்சாரத் தொழிலான திரைப்படத் துறையும் அங்கு இல்லை. இதன் காரணமாகவும் அங்கு பிற நாடுகளில் உள்ளது போன்ற விகிதாச்சாரத்தில் பாலியல் வன்கொடுமைகள் இல்லை.

நீச்சல் போட்டி, கபாடி போட்டி, கூடைப்பந்துப் போட்டி, டென்னிஸ் போட்டி, ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுக்களில் பெண்கள் அரைகுறை ஆடைகளில் அங்கங்கள் குலுங்க விளையாடுகின்ற வாய்ப்புகள் சவூதியில் இல்லை.

சானியா மிர்ஸா போன்ற விரச, விபச்சார விளையாட்டுக்காரிகள் தன்னுடன் விளையாடுகின்ற ஆண் ஜோடியை பகிரங்கமாக மைதானத்திலேயே கணவன் மனைவி போன்று கட்டி அணைக்கும் கேடுகெட்ட ஆபாசமும் அங்கு இல்லை.

இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு சவூதியில் அனுமதி இல்லாததால் தான் அங்கு பாலியல் கொடுமை மற்றும் விபச்சாரங்கள் மலிவாக நடப்பதில்லை.

இதனால் பெண்களுக்கு விளையாட்டுப் பயிற்சியே தேவையில்லை என்று இஸ்லாம் சொல்லவில்லை. இந்த விளையாட்டு உள் அரங்கத்தில் இருக்க வேண்டும். வெளியரங்கத்தில் இருக்கக் கூடாது. அன்னிய ஆடவர்களின் கண்களுக்கு, காமப் பார்வைக்கு விருந்தாக இருக்கக்கூடாது. இதை சவூதியில் ஷரீஅத் சட்டம் பாதுகாத்து வருகின்றது.

அந்நாட்டை உடைத்து, ஒழுக்கரீதியில் சீர்குலைக்க வேண்டும் என்பதே இந்த ஒலிம்பிக் சங்கம் எனும் மேற்கத்தியக் கைக்கூலிகளின் உள்நோக்கம். இதற்கு சவூதி அரசு பலியாகாமல் இருக்க வேண்டும்.

கத்தார் போன்ற நாடுகள் இதற்குப் பலியானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இங்குள்ள மன்னர் அடுத்த நாட்டுக்கு அரசு முறைப் பயணம் செல்கின்ற போது தன்னுடைய மனைவியை இஸ்லாமிய ஆடையுடன் அழைத்துச் செல்வதற்குத் தயாரில்லை. அந்த அளவுக்கு அரபக அரசர்கள் மார்க்கத்தை விட்டுத் தங்களை அன்னியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த ஆட்சியதிகாரம் ஏகத்துவம் எனும் பாக்கியத்தால் கிடைத்தது என்பதை மறந்து விட்டனர். ஓரளவுக்கு மார்க்கப் பிடிப்புள்ளவர்கள் வாழும் கத்தார் போன்ற நாட்டின் கதியே இப்படியென்றால் புருணை போன்ற நாடுகளைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஒலிம்பிக் தடையினால் கிடைக்கப்போகும் அதிகப்பட்சத் தண்டனை என்ன? ஆண்களை விளையாட விடாமல் தடுப்பார்கள். இதனால் இந்த நாடுகளுக்கு என்ன குடிமுழுகி விடப் போகின்றது என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.

ஆண் பெண் சரி நிகர் சமம் என்ற பெயரில் இராணுவத்திலும், காவல்துறையிலும் பெண்களைப் பணிக்குச் சேர்த்து, அதனால் ஆங்காங்கு பாலியல் விவகாரங்கள் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதை இந்த நாடுகள் உணர்ந்தால் பெண்கள் விஷயத்தில் மார்க்கம் சொல்கின்ற இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தவும் தகர்க்கவும் முன்வரமாட்டார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டு என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகளின் மகளிர் ஒழுக்கத்தை வீழ்த்த உலகளாவிய சதியே நடக்கின்றது. இந்தச் சதிக்கு முஸ்லிம் நாடுகள் பலியாகி விடக்கூடாது.

ஒலிம்பிக்கில் பெண்கள் பங்கெடுப்பதை விமர்சிக்கின்ற நாம் ஆண்கள் வீர, தீர விளையாட்டுக்களில் பங்கெடுப்பதை விமர்சிப்பதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.