Tamil Bayan Points

செயற்கை நீர் சாத்தியமா:

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on October 4, 2016 by Trichy Farook

செயற்கையாக நீரை உருவாக்குவது மிகவும் கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக் கூடியவை. ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடியவில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது.

ஆக்சிஜன், இரட்டை அணு வாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித் தெடுத்தால், இரண்டும் நிலையான ‘எலக்ட்ரான்களை’ கொண்டிருக்கும். ஒரே அளவு ‘எலக்ட்ரான்கள்’ கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்) ஏற்படும். செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன.

ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழை நீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குவதை தவிர்த்து, பாதுகாப்பது மிகவும் அவசியம்.