Tamil Bayan Points

செல்ஃபி பைத்தியங்கள்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on October 4, 2016 by Trichy Farook

‘செல்பி’ எனப்­படும் சுய புகைப்­படம் எடுப்­பதால் ஏற்­படும் உயி­ரி­ழப்­புகள் அதி­க­ரித்து வரு­வ­தா­கவும், உல­கி­லேயே இந்­தி­யாவில் தான் அதி­க­ளவு உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­பல அமெ­ரிக்க செய்தி நிறு­வ­ன­மான ‘வொஷிங்டன் போஸ்ட்’ தெரி­வித்­துள்­ளது.

‘செல்பி’ அறி­மு­க­மான புதிதில் வர்த்­தக நிலை­யங்கள், பூங்கா, சுற்­று­லாத்­தளம் என்று பல்­வேறு இடங்­களில் ‘செல்பி’ எடுத்துக் கொண்ட இள வய­தினர், அதிக “Like” குகளுக்கு ஆசைப்­பட்டு ரெயில் கூரை, உய­ர­மான மலை, என்று ஆபத்­தான இடங்­களில் ‘செல்பி’ எடுக்க ஆரம்­பித்­துள்­ளனர். இதனால், ‘செல்பி’ உயி­ரி­ழப்­புகள் அதி­க­ரித்­துள்­ளன.

இந்­நி­லையில், இந்­நி­று­வனம் உலகம் முழு­வதும் நடத்­திய ஆய்வில் 2015 ஆம் ஆண்டு மட்டும் 27 பேர் ‘செல்பி’ எடுத்துக் கொள்­ளும்­போது உயி­ரி­ழந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இதில், பாதி பேர் இந்­தி­யாவை சேர்ந்­த­வர்கள்.
இந்­நி­லையில் மும்பை மற்றும் அதன் சுற்­றுப்­ப­கு­தி­களில் ‘செல்பி’ எடுக்கும் இடங்­களில் அபா­ய­க­ர­மான பகு­தி­க­ளாக 16 இடங்­களை கண்­ட­றிந்­துள்ள பொலிஸார் அப்­ப­கு­தி­களில் ‘செல்பி’ எடுக்க தடை விதித்­துள்­ளனர்.
இதேபோல் இந்தியா முழுவதும் அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து ‘செல்பி’ எடுக்க தடை விதிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். (ஸ)