Tamil Bayan Points

தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on June 2, 2021 by Trichy Farook

தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்?

தொழுகையின் போது முன்னால் வைத்துக் கொள்ள வேண்டிய சுத்ரா எனும் தடுப்பு கிடைக்காவிட்டால் ஒரு கோடு போட்டுக் கொண்டால் போதுமா? பள்ளிவாசலில் ஒவ்வொரு வரிசைக்கும் போடப்பட்டுள்ள கோடு சுத்ராவாக ஆகுமா?

சப்ரி

பதில்

நீங்கள் கூறுவது போன்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா மற்றும் பல நூல்களில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அபூ அம்ர் பின் முஹம்மத் பின் ஹுரைஸ் என்பார் தனது பாட்டனார் வழியாக அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அபூ அம்ர் என்பவர் யார் என்று அறியப்படாதவர்கள். அவரது பாட்டனாரும் யார் என அறியப்படாதவர்கள். ஆகவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

கோடு என்பது சுத்ராவாக ஆகாது. ஏதாவது பொருளைத் தான் சுத்ராவாக வைக்க முடியும்.

 

سنن أبي داود (1/ 183)

689 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، حَدَّثَنِي أَبُو عَمْرِو بْنُ مُحَمَّدِ بْنِ حُرَيْثٍ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ حُرَيْثًا يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَكُنْ مَعَهُ عَصًا فَلْيَخْطُطْ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ أَمَامَهُ»،

حكم الألباني: ضعيف

 

مسند أحمد مخرجا (12/ 427)
7461 – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، وَالثَّوْرِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِي عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ، قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى شَيْءٍ، فَإِنْ لَمْ يَكُنْ شَيْءٌ فَعَصًا، وَإِنْ لَمْ يَكُنْ عَصًا، فَلْيَخْطُطْ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»