Tamil Bayan Points

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on December 31, 2019 by

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

• குறிப்பிட்ட இடம் குறித்த தொல்லியல் துறையின் தரவுகளை, ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது.

• ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றொரு மதத்தின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது

• அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

• மதங்களுக்குள் உள்ள நம்பிக்கையை நீதிமன்றம் மதிக்கிறது.

• அங்கு, இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என ஆதாரங்கள் கூறுகின்றன.

• மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.

• அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்.

• ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றொரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது.

• அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் மூன்றாகப் பிரித்துக் கொடுத்தது தவறு.

• 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்

• அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அஹோரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை

• மதநம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை

• நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது.

• 1857ம் ஆண்டுக்கு முன்புவரை, இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள்பகுதியில் வழிபடத் தடையில்லை.

• 1857-ல் கட்டத்தின் உள்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.

• மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாம் முறைப்படி இல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளது.

• பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

• அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும்.

• வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உத்தரவு

• சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Source: unarvu (15/11/19)