Tamil Bayan Points

கான்பூரில் வெறியாட்டம்- ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 30, 2019 by

BJP யின் காவி வெறியாட்டம்

ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த ஹாலித் அன்சாரி என்ற 15வயது முஸ்லிம் சிறுவனை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய காவி மிருகக் கும்பல்!

தன்னைத் தானே தீவைத்துக் கொளுத்திக் கொண்டதாக முஸ்லிம் சிறுவன் மீதே பழிபோடும் உபி காவல்துறையின் அட்டூழியம்!

கடந்த  ( 28.07.19 ) ஞாயிற்றுக்கிழமை உ.பியில் சாந்தாலி மாவட்டத்தில், காவி பயங்கவராதிகள் 4 பேர் ஹாலித் அன்சாரி என்ற சிறுவனை சுற்றி வளைத்து, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் கேவலப்படுத்திப்பேசு என்று மிரட்டவே, அந்த சிறுவன் அதை மறுத்துள்ளான். உடனே அவனது உடலில் மண்ணென்னெய்யை ஊற்றி தீவைத்துக் கொளுத்திவிட்டு முகத்தை மூடியிருந்த அந்த வெறிக்கும்பல் தப்பி ஓடியது.

60 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில், வாரணாசியில் உள்ள கபீர் சவ்ரா மருத்துவமனையில் அந்தச் சிறுவன் உயிருக்கு போராடி வருகின்றான். இந்நிலையில், வழக்கம் போல யோகி ஆதித்யாநாத்தின் அடிமைகளான உபி காவல்துறை இந்த சம்பவத்தை மறுத்துள்ளது.

இது ஒரு போலியான கதை என்றும், அந்த சிறுவன் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டு இவ்வாறு பொய் சொல்வதாகவும், அவனது தாயும், தந்தையும் திட்டமிட்டு பொய் சொல்வதாகவும், சாந்தாலி மாவட்ட எஸ்.பி. சந்தோஷ்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர் கூறும் காரணம் விசித்திரமானது.

தான் தீவைத்து எரிக்கப்பட்டதாக அந்தச் சிறுவன் சொல்லிய இடத்தை மாற்றி மாற்றிச் சொல்லுகின்றான் என்பதுதான் இவர்களது வாதம். பாதி உடல் எரிந்த நிலையில் வலியால் துடி துடித்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வாக்குமூலம் கொடுத்த சிறுவனை,

அவன் தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டுவிட்டு, முரண்பட்டு பேசுகின்றான் என்று மனிதநேயமே இல்லாமல் உபி காவல்துறை அவன் மீதே பழி சுமத்துவது கொடுமையிலும் கொடுமை.

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்களைக் காத்த மனிதநேய மருத்துவர் கஃபீல் கான் அவர்களையே 7 மாதங்கள் சிறையில் தள்ளிய காவி காவல்துறையிடமிருந்து வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்? 15 வயது முஸ்லிம் சிறுவன் ஹாலித் அன்சாரியையே இவர்கள் கைது செய்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அந்த சிறுவன் பூரண உடல்நலம் பெறவும், காவி வெறிக்கும்பல் அடியோடு அழியவும் வல்ல இறைவனிடம்  துஆ செய்வோம்.!

பத்திரிக்கை செய்தி:

கான்பூரில் வெறியாட்டம்-  ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் சொல்லாத                                                                      முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்!

கான்பூர்: இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தியபடி ஜெய்  ஸ்ரீ ராம் முழக்கத்தை சொல்ல மறுத்த 16 வயது முஸ்லிம் சிறுவன் மிக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் கான்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்  ஸ்ரீ ராம் முழக்கமானது வட இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு ஆயுதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஜார்க்கண்ட்டில் இந்த முழக்கத்தை சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞர் விடிய விடிய தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இம்முழக்கத்தை சொல்ல மறுத்த இஸ்லாமியர்கள் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேசத்தின் 16 வயது முஸ்லிம் சிறுவன் மீது இக்கும்பல் பாய்ந்துள்ளது. கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜ் என்ற சிறுவன், வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் முகமது தாஜை வழிமறித்துள்ளது.

முதலில் தலையில் குல்லா அணியக் கூடாது என அக்கும்பல் சிறுவனிடம் தகராறு செய்தது. அதன் பின்னர் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட வலியுறுத்தியது. இதற்கு முகமது தாஜ் மறுத்திருக்கிறார். உடனே வெறிகொண்ட அக்கும்பல், முகமது தாஜை கொடூரமாக உதைத்து தாக்கியது. இதனால் நிலைகுலைந்த முகமது தாஜ் உதவிகேட்டு அலறி இருக்கிறார். அங்கே இருந்த கடைக்காரர்கள் அக் கும்பலிடம் இருந்து முகமது தாஜை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source:https://tamil.oneindia.com/news/india/hindutva-goons-attack-muslim-boy-for-refuse-to-chant-jai-shri-ram-355570.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article