Tamil Bayan Points

Category: பொதுவான தலைப்புகள் – 2

b104

உயர்ந்து நிற்கும் இஸ்லாம்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம். அந்த மார்க்கம் இன்றளவு எவ்வாறு வளர்ந்து கொண்டு இருக்கிறது. எவ்வாறு உயர்ந்தும் இருக்கிறது. என்பதைப் பற்றி இந்த உரையில் காண்போம்.. உயர்ந்து நிற்கும் இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் பிறந்து வளர்ந்த போது மனிதனுடன் சேர்ந்து பல்வேறு மார்க்கங்களும் வளர்ந்து விட்டன. மனிதனும் தன் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சமயங்களையும் சமணங்களையும் ஏற்படுத்திக் கொண்டான். இதன் விளைவாகத் தான் இன்றைய தினம் எண்ணிலடங்கா மதங்கள் உருவாகியுள்ளன. ஆனாலும் இத்தனை மார்க்கங்களும் தன் […]

ஒழுக்க சீலர் நபிகளார்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அனைத்து விஷயத்திலும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அதேப்போன்று ஒழுக்கத்திலும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். நபிகள் நாயகம் அவர்கள் ஒழுக்க சீலராக வாழ்ந்து காட்டினார்கள். இதோ அவர்களின் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம். ஒழுக்க சீலர் நபிகளார் உலக மக்களை சீர்திருத்த ஏராளமான தலைவர்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்துள்ளனர். அவர்களின் கொள்கைளும் கோட்பாடுகளும் அறிவுரைகளும் மக்களின் மனதில் இடம்பெறவில்லை. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரபுலுகில் […]

முகமன் கூறுதல்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் முகமன் கூறுதல் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! முகமன் கூறுதல் வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறுதல் வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறி நுழையும் வழக்கம் நம்மில் அதிகமானோரிடத்தில் இல்லை. ஆடு மாடுகள் முறையின்றி நுழைவதைப் போன்றே ஆறறிவு பெற்ற நாமும் நடந்து கொள்கிறோம். நாகரீகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலகட்டத்தில் இந்த ஒழுங்கு பேணப்படுவதில்லை. தன்னுடைய சொந்த வீடாக இருந்தாலும் சலாம் […]

நம்பிக்கைக் கொண்டவர்களே!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நம்பிக்கை கொண்டவர்களே! என்று குர்ஆனில் அதிகமாக இந்த வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ் இந்த வாசகத்தின் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு செய்யும் உபதேசம் என்ன? என்பதை இந்த உரையில் காண்போம்.  நம்பிக்கைக் கொண்டவர்களே! திருக்குர்ஆனில் (யா அய்யுஹல்லதீன் ஆமனூ) ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து பல முக்கியமான விஷயங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். திருக்குர்ஆனில் மொத்தம் 89 இடங்களில் இவ்வாறு கூறுகின்றான். அவற்றில் சில அறிவுரைகள் அந்த காலத்தை கருத்தில் […]

நண்பர்களின் கடமை..?

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் கூறும் நட்பு எவ்வாறு அமைந்து இருக்க வேண்டும்.. என்பதை இந்த உரையில் காண்போம்.. நட்பு ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இது போன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை. […]

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்..?

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும்  மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் இந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் […]

நபியவர்களைச் சாராதவர்கள்

நபியவர்களைச் சாராதவர்கள் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டை நாம் பார்க்கலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட செயல்களை நபி (ஸல்) அவர்கள், ‘இந்தச் செயலைச் செய்தவன் என்னைச் சார்ந்தவன் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். கடும் கோபம் ஏற்படும் போது […]

ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்

ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள் அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மிக முக்கிய கடமையான ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள், அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை இந்த உரையில் காண்போம். இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக […]

வெற்றி பெற்றோர் யார்?

வெற்றி பெற்றோர் யார்? மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இந்த உலகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணை வைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கை கொண்டு அவனது தூதருக்குக் கீழ்ப் படிந்து வருகிறார்கள். இந்தச் சொற்பக் கூட்டத்தைச் சார்ந்தவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும்! இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்குக் கற்றுத் தந்த நபி (ஸல்) அவர்கள், சில காரியங்களைத் தங்கள் வாழ்நாளில் செய்தவர்களைக் குறித்து வெற்றியாளர்கள் என்று கூறியுள்ளார்கள். […]

பொறுப்புள்ள பெற்றோர்களாக ஆகுவோம்!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் நம் மீது ஏராளமான பொறுப்புகளை சுமத்தியிருக்கிறது. أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ […]

செல்வம் ஒரு சோதனையே

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! உலகில் வாழும் எந்த மனிதனிடமும் பணத்தாசை இல்லாமல் இருக்காது. இதனால் தான் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த ஆசையை ஒரு சோதனையாக அல்லாஹ் அமைத்துள்ளான். எப்படி அல்லாஹ் சோதனையாக அமைத்துள்ளான் என்பதையும் அந்த பணத்தாசையிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பதையும் இந்த உரையில் காண்போம்.. செல்வம் ஒரு சோதனையே  زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ […]

ஈமானின் சுவை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இன்றைய காலத்தில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் தங்களை அறியாமலேயே தவறுகள் செய்வதற்குக் காரணம், அவர்களுக்கு ஈமான் என்றால் என்ன? என்பது தெரியாதது தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈமானைப் பற்றி அழகிய முறையில் சொல்லிக் காட்டுகிறார்கள். அவர்கள் சொல்லி காட்டிய போதனைகளில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்.. ஈமானின் சுவை ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ […]

இறுதி நபித்துவம்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தான் இறுதி இறைத்தூதர் அவர்களுக்கு பிறகு எந்த நபியும் எந்த தூதரும் வர மாட்டார்கள். அவர்களே நபிமார்களில் இறுதியானவர்.. இதைப் பற்றி நபியவர்கள் கூறிய முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் இந்த உரையில் காண்போம்..  இறுதி நபித்துவம் إِنَّ ” مَثَلِي وَمَثَلَ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِي، كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ، إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ، فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ، وَيَعْجَبُونَ […]

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து அவற்றிற்குத் தேவையான வசதிகளையும் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளான். இதன் அடிப்படையில் அவன் மற்ற உயிரியினங்களைக் காட்டிலும் மனிதனுக்கு ஏராளமான பாக்கியங்களை கூடுதலாக வழங்கியுள்ளான். அவன் வழங்கிய அந்தப் பாக்கியங்களில் ஒன்றான செல்வம் மக்களால் அதிகம் நேசிக்கப்படுகிறது. பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கேற்ப, நீதியைக் காக்க வேண்டிய நீதித் துறையும், நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் செய்ய வேண்டிய காவல் துறையும் தாங்கள் […]

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு இறைவன் அறிவை அதிகமாகக் கொடுத்திருந்தாலும் அவனை நல்வழிப்படுத்த பிறரின் வாயிலாக உபதேசங்களும் விதிமுறைகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றது. எனவே தான் எல்லா நாடுகளிலும் குடிமக்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அவ்வப்போது அந்நாடு அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. மனிதனுடைய அறிவை நம்பி அந்நாடு அவற்றை வலியுறுத்தாமல் விட்டு விட்டால் சட்டம் ஒழுங்கு […]

பிள்ளைகளின் கடமை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கம் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவர்களை அரவணைக்க வேண்டும் என்று பல்வேறு போதனைகளை செய்கிறது.. அப்படிப்பட்ட போதனைகளை இந்த உரையில் காண்போம்.. பிள்ளைகளின் கடமை பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது கட்டாயக் கடமையாகும். وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا […]

தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்….

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் தடுத்த தீய மூன்று குனாதிசயங்களை இந்த உரையில் காண்போம்.. தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்…. مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ: الْكِبْرِ وَالْغُلُولِ، وَالدَّيْنِ فَهُوَ فِي الْجَنَّةِ ‘ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஒவ்வொரும் முஸ்லிமும் மறுமையில் சுவர்க்கம் செல்வதற்காக இவ்வுலகில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். சுவக்கம் செல்வதற்கு அல்லாஹ்வுடைய தூதர் நபிகளார் நமக்கு ஏராளமான அறிவுரைகளை செய்திருக்கிறார்கள். அந்த அறிவுரைகளில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்.. சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள் மறுமை நாளில் இறைவன் வழங்கும் உயர்ந்த சொர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய பல நற்காரியங்களை நபி (ஸல்) அவர்கள் இச்சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த […]

மறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை

மறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பல விஷயங்களை இலக்காகக் கொண்டு வாழும் நாம் நமது விருப்பங்களை அடைவதற்காக அல்லும் பகலுமாகப் பாடுபட்டு வருகிறோம். இந்நேரத்தில் நமது குறிக்கோளுக்கு முட்டுக்கட்டையாக ஏதாவது நடந்து விட்டால் தலை வெடிக்கின்ற அளவிற்கு நம்மைக் கவலை கவ்விக் கொள்கிறது. முட்டுக்கட்டையைக் களைவதில் முனைப்புடன் செயல்படுகிறோம். நேசித்த பொருள் கை நழுவிச் சென்றால் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாலய சிரமத்திற்குப் பின் […]

அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்?

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நம் வாழ்வில் நமக்கு மிகவும் பிரியத்திற்குரியவர், நேசத்திற்குரியவர் என்று சிலர் இருப்பார்கள். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், பெற்றோர்கள் பிள்ளைக்கும், பிள்ளைகள் பெற்றோருக்கும், உடன் பிறந்தவர்களுக்கிடையே மற்றும் நண்பர்களுக்கிடையே நேசத்தை வைத்திருப்போம். ஆனால், இவ்வுலகில் எத்தனை பேர் நம்மை படைத்த அல்லாஹ்வை நேசிக்கின்றனர். ஆனால், நாம் வாழக்கூடிய இந்த வாழ்க்கையில் நாம் செய்ய கூடிய சில செயல்களை பார்த்து வல்ல அல்லாஹ் நம்மை நேசிப்பதாக கூறுகிறான். அவற்றை […]

அல்லாஹ்வை நினைப்போம்! வெற்றி பெறுவோம்!

முன்னுரை அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகில் மனிதனை படைத்த நோக்கமே படைத்த இறைவனை வணங்குவதற்காகத் தான். ஆனால், மனிதனோ தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டவனாக கட்டுப்பாடின்றி வாழ்கிறான். அவ்வாறு இல்லாமல் மனிதன் ஒழுக்கமாக நன்னெறியில் முறைப்படி வாழுவதற்கு, இறைவனை நினைவு கூறுவது அவசியம், இறைவனை நினைவு கூறுவதன் மூலமாகத்தான் உள்ளங்கள் அமைதி பெறும் என்று அல்லாஹ் கூறுகிறான். மறுமையின் வெற்றியும் இந்த திக்ர் என்னும் இறைநினைவில் தான் உள்ளது. அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கு, சில எளிய வழிமுறைகளை […]

இக்லாஸே இஸ்லாத்தின் அடிப்படை!

இக்லாஸ் – மனத்தூய்மை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாத்தை பொறுத்தவரையில், நன்மைகளை செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட, முக்கியமாக அந்த நன்மைகளை, வணக்க வழிபாடுகளை இறைவனுக்காக மட்டுமே, மனத்தூய்மையுடன் செய்ய வேண்டும், மனிதர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக செய்யக் கூடாது என்பதும் மிக முக்கியமானது, மட்டுமின்றி, இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒரு அடிப்படையும் கூட. தொழுகையை நிறைவேற்ற வேண்டும், ஜகாத்தை கொடுக்க வேண்டும் என்பதை கூறுவதற்கு முன்னர், அல்லாஹ் ஒரு அறிவுரை கூறி […]

அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுகை

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இவ்வுலகில் மனிதன் பல தருணங்களில் அழுகின்றான். கணவர், மனைவி, தாய், தந்தை, சகோதரர், சகோதரிகள் போன்ற உறவுகள் துண்டிக்கப்பட்டால் அழுகிறான். அதேப்போன்று தான் செய்கின்ற வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டால் அதற்காகவும், பொருளாதார மோசடி போன்றவைக்கும் அழுகிறான். மேலும், சிலர் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலோ, தனக்கு ஆசைப்பட்ட பொருள் கிடைக்காவிட்டாலோ இயற்கை சீற்றம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளானாலோ, உணர்ச்சிவசப்படும் போதோ போன்ற பல்வேறு தருணங்களில் கண்ணீர் வடிக்கின்றான். […]

இன்றைய இளைஞர்களின் நிலை.!

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித வாழ்க்கை பல பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான். அதன் பிறகு முதுமைப் பருவம். இளமை பருவத்தில் தான் ஒரு மனிதனுக்கு தவறிழைக்க அதிக […]

தூதர் பாராட்டிய சஹாபாக்கள்

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை இறுதி தூதராக தேர்ந்தெடுத்ததற்கு முன்னரே அவர்களின் குணம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டி கூறும் அளவிற்கு தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவே நபிகள் நாயகம் அவர்களுக்கு வியாபாரத்தில் இருந்த விசுவாசம், நியாயமான கட்டமைப்பு, வாக்குறுதியில் நேர்மை என அனைத்தும் பார்த்து தான் மணமுடித்து கொண்டார்கள். அதேப் போன்று நபிகள் […]

சிந்திக்க தூண்டும் ஹதீஸ்கள்

முன்னுரை அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு செய்திகளை காலத்திற்கேற்ப கூறியிருக்கிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட செய்திகளில் சிலவை நம்மை சிந்திக்க வைக்கின்றது. அவற்றை இந்த உரையில் காண்போம். ஒட்டகத்தின் பாலிலும், சிறுநீரிலும் நோய் நிவாரணம்  قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوْا المَدِينَةَ «فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا» فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا، قَتَلُوا رَاعِيَ […]

முன்னொரு காலத்தில்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! முந்தைய காலத்தில் நடைப்பெற்ற சில நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் சில வலராற்று செய்திகளை இந்த உரையில் காண்போம்.. முற்காலத்தில் இரண்டு பெண்கள் சண்டையிட்ட தொடர்பான செய்தி  كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ صَاحِبَتُهَا: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، وَقَالَتِ الأُخْرَى: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَتَا […]

இறைதூதரின் பிரார்த்தனைகள் (மக்களுக்காக)

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் தன் சமுதாயத்திற்காக பல்வேறு பிரார்த்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவ்வாறு கற்று தந்த பிரார்த்தனைகளை யாவும் மனிதர்கள் இவ்வுலகம் அழியும் வரை அல்லாஹ்விடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்க கூடிய பிரார்த்தனைகளாகவும் அமைந்து இருந்தது. நபிகளார் காட்டித்தந்த பிரார்த்தனைகளில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்..  நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக செய்த பிராத்தனை لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا، […]

இறைவசனம் இறங்கிய நேரங்கள்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! முதன்முதலில் நபி (ஸல்) அவர்களுக்கு ஹிரா குகையில் தான் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் முதல் இறைச்செய்தி அருளப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்களுக்கு காலகட்டத்திற்கேற்ப இறைச்செய்திகள் வந்தன. சில செய்திகள் முஹம்மதை பாராட்டியும், வழிகாட்டியும், அறிவுரை கூறியும், எச்சரித்தும், கண்டித்தும் வந்துள்ளது. அவ்வாறு இறைவசனங்கள் இறக்கப்பட்ட நேரங்களை பற்றி இந்த உரையில் காண்போம். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம் நபிகள் […]

இறைத்தூதரின் முன்னறிவிப்புகள் (அன்று நடந்தவை)

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இவ்வுலகத்தில் படைத்த ஒவ்வொரு குலத்தாருக்கும் ஒவ்வொரு நபிமார்களை இறைவன் அனுப்பிக்கொண்டே இருந்தான். இறுதி நபியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களை அனுப்பி அவர்களுக்கு கியாமத் நாள் வரை அற்புதமாக வைத்து கொள்ளக்கூடிய திருக்குர்ஆனை வழங்கி அனுப்பினான். திருக்குர்ஆனை விட சிறந்த அற்புதமாக எதுவும் இருக்கமுடியாது என்ற அளவிற்கு அதில் ஏராளமான சான்றுகள் பல உள்ளன. மேலும், நபி (ஸல்) அவர்கள் மூலம் பல செய்திகளை அனுப்பினான். அதுவும் […]

இறைதூதரின் பிரார்த்தனைகள் (சந்தர்ப்ப துஆ)

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அதிலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறப்பு பிரார்த்தனைகள் செய்துள்ளார்கள். அப்படிப்பட்ட பிரார்த்தனைகளை உரையில் காண்போம்.. கஅபதுல்லாஹ்வில் கேட்கப்பட்ட பிரார்த்தனைகள்  நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது […]

கடுமையான தண்டனைகள்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இவ்வுலகில் மனிதனை படைத்ததின் நோக்கமே அல்லாஹ்வை வணங்கவும், அவனின் தூதரின் கூற்றை பின்பற்றி நடப்பதற்காகவும் தான். அவ்வாறு அல்லாஹ்வை மட்டும் வணங்கி, தூதரின் சொல்லை அப்படியே பின்பற்றி நடக்கும் போது ஷைத்தானின் ஊசலாட்டதால் ஒரு சாரார் வேறொரு வழியை பின்பற்றி நிரந்தர நரகத்திற்குரிய செயல்களை செய்துவிடுகின்றனர். அக்காரியங்களை செய்தவர்களுக்கு இறைவன் மறுமை நாளில் கடுமையான தண்டனைகளை வழங்குகின்றான். அந்த காரியங்களையும் அந்த தண்டனைகளையும் இந்த உரையில் காண்போம். இணைவைப்பு مَنْ مَاتَ […]

சொர்க்கம் தடுக்கப்பட்டவர்கள்

முன்னுரை அல்லாஹ் இவ்வுலகில் மனிதனை படைத்ததின் நோக்கமே அவனை வணங்கி, வழிபட்டு, அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த முறைப்படி நம் வாழ்வை அமைத்து இறுதியில் மரணம் நம்மை வந்து அடையும். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கு தகுந்தாற்போல் அவரவர்களுக்கு சுவர்க்கம், நரகம் நிச்சயிக்கப்படும். ஆனால், சொர்க்கத்திற்கு செல்லக் கூடியவர்கள் ஒரு சில செயல்கள் அவர்களை சுவர்க்கம் செல்வதை விட்டும் தடுத்துவிடுகின்றது. அவ்வாறு தடுக்கும் செயல்கள் எது என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் முற்றிலும் பூரணிக்க கூடியவர்களாக ஆக வேண்டும். உறுதி செய்யப்பட […]

அல்லாஹ்வை நினைப்பது

முன்னுரை இவ்வுலகில் நாம் பிறந்ததன் நோக்கமே வல்லோனாகிய வல்ல அல்லாஹ்வை நினைத்து துதிப்பதற்காகவே! மாறாக, அதை மட்டும் விட்டுவிட்டு இவ்வுலகை வாழ்க்கையை விரும்பக்கூடியவர்களாக நாம் இருக்கின்றோம். அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றி பின் வரும் செய்திகளில் பார்ப்போம். சிறந்த ஆடை எது ? يٰبَنِىْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا‌ ؕ وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ‌ ؕ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ […]

பேச்சின் ஒழுங்குகள்

முன்னுரை நாம் பேசும் பேச்சுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்கள். பேசும் பேச்சுகளில் நிதானமும், நளினமும் இருத்தல் வேண்டும். பின்வரும் சில ஹதீஸ்களை பார்ப்போம். நல்ல வார்த்தைகளை நவில வேண்டும் يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏ நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! (அல்குர்ஆன்: 33:70) مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ […]

இஸ்லாமும் மனிதநேயமும்

முன்னுரை மனித நேயத்தை இஸ்லாம் போதித்த அளவிற்கு உலகில் வேறு எந்த மதமும், மார்க்கமும் போதித்ததில்லை. பிற மனிதர்களின் நலம் நாடுவதே இஸ்லாம் என்பது நபியவர்களின் போதனை.    عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «الدِّينُ النَّصِيحَةُ» قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ தமீமுத் தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது“ […]

நபிகளார் கூறிய கடந்த கால நிகழ்வுகள்

முன்னுரை இந்த பூமியில் இப்போது நாம் வாழ்வதற்கு முன்னால், பல சமுதாய மக்கள் வாழ்ந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. முக்காலத்தையும் தெளிவாகத் தெரிந்திருக்கும் தன்மை என்பது ஏகஇறைவனுக்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பாகும். கடந்த தலைமுறையினர் அனைவரையும் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அறிந்திருக்கிற ஆற்றல் மனிதனுக்கு இல்லை. இந்நிலையில், இறைவனிடம் இருந்து வரும் இறைச்செய்தியின் வாயிலாக முந்தைய சமுதாயத்தவர்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள். […]

சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்

முன்னுரை மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சொர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. சொர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு அதில் நுழைவதற்கான தகுதிகள், மற்றும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனவே சொர்க்கம் பற்றிய குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் முக்கிய தகவல்களை சுருக்கமாக இன்று பார்க்க இருக்கிறோம்! தகுதி சொர்க்கத்தில் நுழைய யார் தகுதி பெறுவார்கள் என்பதை குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு […]

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை இன்று அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத ஒன்று தான் பொறுமை எனும் நற்பண்பு. பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் “பொறுமை” என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. பொறுத்தார் பூமியாள்வார், பொறுமை கடலினும் பெரிது, பொறுமை பூமியைக் காட்டிலும் பெரியது, வலிமை உடையவரை விட பொறுமை உடையவரே மேலானவர், “ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் […]

நபிகளார் தேடிய பாதுகாப்பு

நபிகளார் தேடிய பாதுகாப்பு சுவனம், மறுமையில் சிறந்த அந்தஸ்து, உலகில் செல்வம், குழந்தைச் செல்வம், அறிவு போன்ற பல விஷயங்களை இறைவனிடம் வேண்டுகிறோம். நன்மையான காரியங்களை இறைவனிடம் கேட்பது எவ்வாறு அவசியமானதோ, அதைப் போன்று, சில நேரங்களில் அதை விட முக்கியமாக, பல செயல்களை, பல காரியங்களை விட்டு இறைவனிடம் பாதுகாப்பும் தேடுவது முக்கியமானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு தீமைகளை விட்டும், காரியங்களை விட்டும் இறைவனிம் பாதுகாப்பு தேடினார்கள். அவற்றை குறித்து வரிசையாக காண்போம். […]

சொர்க்கவாசியாக மரணிப்போம்

இறைவன் ஒருவன் என்பதை அறிந்த நிலையில் மரணித்தால் مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللهُ، دَخَلَ الْجَنَّةَ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார். இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்-43)  அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் மரணித்தால் مَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ […]

நபிகளாரின் கண்கள் சிவந்த தருணங்கள்

முன்னுரை அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் போது மென்மையை கடைப்பிடித்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களின் போதனைகள் முழுவதும் நமக்கு சொல்கின்றன. இறைவன் கூட தன்னுடைய திருமறையில் சொல்கிறான். فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى […]

மாநபி கண்ட மகத்தான மக்கா வெற்றி!!!

மாநபி கண்ட மகத்தான மக்கா வெற்றி முன்னுரை குரங்கு கையில் பூமாலையைப் போல் குறைஷிகள் கையில் புனித ஆலயம் கஅபா மாட்டிக் கொண்டிருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்ததும் நபியவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஅபாவில் நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். மீறிச் சென்றால் தாக்கப்பட்டனர். குறைஷிகளின் இந்த அட்டூழியம் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு வரை தொடர்ந்து அதன் உச்சக்கட்டமாக உம்ரா செய்ய வந்த மக்கா மண்ணின் மைந்தரான நபி […]

புகழ் எனும் போதை

புகழ் எனும் போதை  اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ‌ؕ اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ தள்ளாத வயதில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் தந்த எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என் இறைவன் பிராத்தனையை கேட்பவன். (அல்குர்ஆன்: 14:39) அறிவை கொடுத்த அல்லாஹ்வை புகழ்ந்த தந்தையும் மகனும் وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏ தாவுதுக்கும் […]

சிரிப்பு இறைவனின் பாக்கியம்

முன்னுரை நகைச்சுவை உணர்வு, சிரிப்பு என்பது இறைவன் மனித குலத்திற்கு அளித்த பாக்கியங்களில் ஒன்றாகும். மனிதன் சிரிக்கத் தெரிந்த விலங்கு என்று பேச்சு வழக்கில் குறிப்பிடப்படுவது உண்டு.  சிரிப்பதற்கென்றே சில நாடுகளில் அமைப்புகள் உள்ளன. சிரிப்பு யோகா கூட உள்ளது. உலக சிரிப்பு தினம் (World Laughter Day) முதன்முதலாக 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் நாள் மதன் கட்டாரியா என்பவரால் சிரிப்பு தினம் தொடங்கப்பட்டது. அவர் இதை சிரிப்பு யோகாவாகவே அறிமுகப்படுத்தினார். இன்று 65 நாடுகளில் […]

கண்ணீர் சிந்தி அழுவோம்!

முன்னுரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!  இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். சிரிப்பது மட்டுமே உடலுக்கு மனித குலத்திற்கு நல்லது என்று எண்ணி அதிகமான மக்கள் எப்போது பார்த்தாலும், சிரித்துக் கொண்டே இருப்பதை பார்க்கிறோம். சிரிப்பதற்கென்றே சில நாடுகளில் அமைப்புகள் உள்ளன. சிரிப்பு யோகா கூட உள்ளது.  உலக சிரிப்பு தினம் (World Laughter Day) முதன்முதலாக 1998ஆம் ஆண்டு ஜனவரி […]

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை […]

ஷைத்தானில் பெயரில் பித்தலாட்டங்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நம் சமுதாயத்தில், ஷைத்தானை விரட்டும் பெயரில் ஏராளமான பித்தலாட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இன்று காண்போம்! சைத்தானால் இடஞ்சல்கள் ஏற்படும் மனிதனுக்கு சைத்தானால் சில இடஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். قَالَ أَبُو هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ مَا مِنْ بَنِي آدَمَ […]

மென்மையை தேர்வு செய்த மேன்மை நபி

மென்மையும் பொறுமையும் فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏ (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் […]

பொறாமைத் தீ

பொறாமைத் தீ இந்த பொறாமையின் காரணமாகத்தான் மனித இனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் முதல் கொலையே நடந்தது. وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ لَئِنْ بَسَطْتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بِبَاسِطٍ يَدِيَ إِلَيْكَ لِأَقْتُلَكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ إِنِّي أُرِيدُ أَنْ […]

Next Page » « Previous Page