Tamil Bayan Points

Category: தற்காலிக நிகழ்வுகள்

b160

டி.வி சீரியல் விபரீதம்: சிறுமி பலி!

  டி.வி சீரியல் விபரீதம்: சிறுமி பலி! கி.ஹாஜா மைதீன் தொலைக்காட்சி சீரியல்கள் மனிதர்களின் மூளையை மழுங்கடித்து வருகிறது. அதில் இடம்பெறும் கற்பனைக் காட்சிகளை உண்மை என நம்புகின்ற மக்களைப் பார்க்கிறோம். பெரியவர்களே தொலைக் காட்சியில் மூழ்கியிருக்கும் போது சிறார்களைச் சொல்லவா வேண்டும்? சமீபத்தில் சீரியலினால் நடந்த விபரீதத்தினைப் பாருங்கள்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரார்த்தனா என்ற சிறுமி நந்தினி என்ற கன்னடத் தொடரை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். அதில் ஒரு காட்சியில் கதாநாயகி தன்னைச் சுற்றி […]

நபிகள் நாயகத்தின் முடிக்கு(?) தர்கா!

நபிகள் நாயகத்தின் முடிக்கு(?) தர்கா! காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஹஸ்ரத் பால் தர்கா இருக்கிறது. இது தர்கா என்று சொல்லப்பட்டாலும் இங்கு சமாதி எதுவும் கிடையாது. பால் என்ற பாரசீகச் சொல்லிக்கு முடி என்று பொருள். ஹஸ்ரத் பால் என்றால் புனித முடி என்று பொருள். இந்த தர்காவில் ஒரு முடி காட்சிப் படுத்தப்பட்டு, அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முடி என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஒரு கதையையும் கட்டியுள்ளனர். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல் […]

மாட்டிறைச்சியின் பெயரால் தொடரும் தாக்குதல்கள்

மாட்டிறைச்சியின் பெயரால் தொடரும் தாக்குதல்கள்  மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் பல இன மத மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்திய ஜனநாயகம் ஒவ்வொரு மத இன மக்களுக்கும் ஒவ்வொரு வகையான உரிமைகளை வழங்கியுள்ளது. பேச்சுரிமை எழுத்துரிமை மத வழிபாட்டு உரிமை என ஒவ்வொரு மத மக்களுக்கும் பலவிதமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமைகளின் பட்டியலில் உணவிற்கான தனிநபர் உரிமையும் அடக்கம். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய தேசத்தில் ஒருநபர் என்ன உணவை உட்கொள்ளலாம் […]

மீட்புப் பணியில் மரணித்த முஸ்லிம்

மீட்புப் பணியில் மரணித்த முஸ்லிம் காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியிலுள்ள லிட்டர் ஆற்றில் படகு பயணம் செய்வதற்கு கடந்த 31-06-2019 வெள்ளிக் கிழமை அன்று ஐந்து சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக ரூஃப் அகமது தார் எனும் முஸ்லிம் இளைஞர் சென்றுள்ளார். காஷ்மீரின் குல்காம் பகுதியைச் சேர்ந்த இவர், அரசு பதிவு பெற்ற தொழில்முறை வழிகாட்டியாக இருப்பவர். ஸ்ரீநகரில் இருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றுப் பகுதியில் படகு […]

மீண்டும் தலைதூக்கும் மதவாதம்

  மீண்டும் தலைதூக்கும் மதவாதம் பீஹார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட முஹம்மது பர்கர் ஆலம் (வயது 25) எனும் முஸ்லிம் இளைஞர், ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் ஜேக்கப் புரா பகுதியில் வசித்து வருகிறார். அந்தப் பகுதியிலுள்ள சர்தார் பஜாரில் தையல் கடையில் வேலை செய்யும் இவர், கடந்த மே மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு அருகில் இருந்த பள்ளிவாசலில் தொழுது விட்டு கடைக்குத் திரும்பும் போது அவரை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்துள்ளனர். […]

ஒரே நாளில் 37 பேருக்கு தண்டனை வழங்கிய சவூதி அரேபியா.!

ஒரே நாளில் 37 பேருக்கு தண்டனை வழங்கிய சவூதி அரேபியா கடமையைச் செய்யாத சட்டம் பெண்களை மிரட்டும் பாலியல் கும்பல்! இஸ்லாமிய சட்டத்தைக் கடைபிடித்து வரும் சவூதி அரேபியாவில் குற்றம் நிறுபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம். தண்டனை என்று சொன்னால் நான்கு சுவற்றுக்குள் யாருக்குமே தெரியாமல் தண்டனையை நிறைவேற்றுவது அல்ல! மாறாக அனைவரின் முன்னிலையிலும் அனைவரும் பார்க்கும் வகையிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இவ்வாறு நிறைவேற்றப்படும் தண்டனைகளின் காரணமாகவே சவூதி அரேபியாவில் குற்றங்கள் மிகவும் குறைந்து காணப்படுகின்றது. […]

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் இஸ்லாமிய அமைப்பா?

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் இஸ்லாமிய அமைப்பா?  இலங்கையில் 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் தற்கொலைப் படைத்தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தார்கள். ஐநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் நிரந்தர ஊனம் ஆகியுள்ளனர் என்கின்ற தகவல் உள்ளத்தை உருக்கி கண்களில் நீரைக் கசிய வைக்கின்றது.. இலங்கையில் நடைபெற்ற இந்த கொடூர குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் 50 மணி நேரங்கள் கழித்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. […]

பப்ஜி கேம் தடைசெய்யப்படுமா?

பப்ஜி கேம் தடைசெய்யப்படுமா? இண்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் பெருகிய பிறகு பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களின் வரத்து அதிகமாகி விட்டது. அந்த ஃபோன்களில் பயன்படுத்தும் வகையில் ஏராளமான அப்ளிகேசன்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதுவும் பொழுது போக்குவதற்கு என்று நிறைய கேம்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதில் சில கேம்கள் சில நாட்களிலேயே பெரும்பாலான மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகின்றன. அதற்கு அவர்கள் அடிமையாக மாறிவிடுகிறார்கள். இந்த வகையில் புளூவேல் எனும் கேம் உலக […]

ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

ஜனநாயகமா? சர்வாதிகாரமா? இந்தியா ஜனநாயக நாடு, குடியரசு நாடு, மதச்சார்பற்ற நாடு என்று பெயரெடுத்த காலமெல்லாம் போய் இப்போது இந்தியா சர்வாதிகார நாடு என்று சொல்லும் காலம் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்ற இலக்கியச் சொல்லாடெல்லாம் மறந்து போய் இநதியா குழப்பத்தின் பொன்னாடே என்று நவீன கவிஞர்கள் எழுதும் நிலை வந்து விடும் போலிருக்கின்றது. மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் உள்ள ஒரே வேறுபாடு தேர்தல் முறையாகும். குடியரசு […]

ஆண்களுக்கும் பாதுகாப்பளிக்கும் புர்கா

ஆண்களுக்கும் பாதுகாப்பளிக்கும் புர்கா கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் எம்.இ.எஸ். முஸ்லிம் கல்விக் குழுமம் உள்ளது. இந்த கல்விக் குழுமத்தின் சார்பில் 35 கல்லூரிகள், 72 பள்ளிகள் நடத்தப் படுகின்றன. இந்த கல்விக் கூடங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் புர்கா உடை அணிந்து வர தடை விதிக்க வேண்டும் என குழுமத்தின் சார்பில் கல்லூரி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியவுடன் மாணவ, மாணவிகளின் சீருடையை முடிவு செய்வது கல்வி நிறுவனர்களின் தனிப்பட்ட உரிமை. […]

நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதால் தலித் இளைஞர் படுகொலை!

நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதால் தலித் இளைஞர் படுகொலை! கடந்த ஐந்து வருட கால பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மற்றும் தலித் இனத்தைச் சார்ந்த மக்களுக்கு எதிராக கடுமையான அராஜகப் போக்கையும், படுகொலைகளையும் பாஜக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காலகட்டத்தில் அரங்கேறியது. எத்தனையோ படுகொலைகள் ஆட்சிக் காலத்தில் தான் அரங்கேற்றப்பட்டது. இப்போது ஆட்சிக் கட்டிலில் இல்லையே அநியாயங்கள் அரங்கேறுவதற்கு வாய்ப்பில்லை என்று மக்களெல்லாம் எண்ணி விடக் கூடாது என்பதற்காக மிகப்பெரும் ஒரு அநியாயத்தை மதவெறி பிடித்த, ஜாதி […]

மத சுதந்திர பட்டியலில் ஆபத்தான இடத்தில் இந்தியா….!

மத சுதந்திர பட்டியலில் ஆபத்தான இடத்தில் இந்தியா….! சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையத்தின் 20- வது ஆண்டறிக்கையில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனம் தேவைப்படும் இரண்டாம் அடுக்கு பட்டியலில் ஆப்கானிஸ்தான், எகிப்து, இந்தோனேஷியா, இராக், கஜகஸ்தான், மலேசியா, துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளோடு 12வது நாடாக இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப் படுவதாலேயே இந்தப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்பதை எண்ணிப் […]

போர்களால் ஆண்டுக்கு இலட்சம் குழந்தைகள் பலி

போர்களால் ஆண்டுக்கு இலட்சம் குழந்தைகள் பலி  போர் மூலமாக பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கு தான் சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் தடுப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. எல்லைப் பிரச்சனை கொண்ட நாடுகள் தங்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வைத்துள்ளன. ஆனால் அதையும் மீறி தார்மீக நெறிகளுக்கு எதிராக பல நாடுகள் இடையே வெளிப்படையாகவும் மறைவாகவும் போர் நடக்கின்றன. இதனால் மக்கள் கொன்று அழிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏதும் அறியாத குழந்தைகளும் சிறுவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். அமெரிக்க, […]

மதவெறியை வென்ற மனிதநேயம்

மதவெறியை வென்ற மனிதநேயம் இந்தியாவில் மனிதநேயம் மரணித்து விட்டதை கடந்த 5 ஆண்டுகளில் பார்த்திருப்போம். வீட்டில் ஆட்டிறைச்சி வைத்திருந்த ராணுவ வீரரின் தந்தை அஹ்லாக் என்ற அப்பாவி முதியவரை பயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்தனர். ராஜஸ்தானில் ஒரு அப்பாவி முஸ்லிம் முதியவரை தன் தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்ற பயங்கரவாதி ஒருவன், அவரை லவ் ஜிகாத் செய்து விட்டார் என்று பொய் கூறி கோடாரியால் வெட்டி பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திய நிகழ்வு நெஞ்சை பதற வைத்தது. நாட்டில் […]

காவி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தப்ரேஸ் அன்சாரி.!

காவி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தப்ரேஸ் அன்சாரி.! ஜாம்ஷெட்பூர்: ஊருக்குள் இருசக்கர வாகனத்தை திருட வந்ததாக கூறி 24 வயது முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் இரவு முழுவதும் அடித்து உதைத்து துன்புறுத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லப்பட்டவருக்கு திருமணம் நடந்து ஒன்றறை மாதமே ஆகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சரைக்கெலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் தப்ரேஸ் அன்சாரி என்ற 24 வயது இஸ்லாமிய இளைஞர், இவர் அந்த பகுதியில் உள்ள செரைகெலா என்ற […]

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்!

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்! கான்பூர்: இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தியபடி ஜெய்  ஸ்ரீராம் முழக்கத்தை சொல்ல மறுத்த 16 வயது முஸ்லிம் சிறுவன் மிக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் கான்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்  ஸ்ரீராம் முழக்கமானது வட இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு ஆயுதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஜார்க்கண்ட்டில் இந்த முழக்கத்தை சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞர் விடிய விடிய தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் இம்முழக்கத்தை சொல்ல […]

காவி வெறியர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சனாவுல்லாஹ் ஷேக்!

காவி வெறியர்களால்  பிறப்புறுப்பிலேயே அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சனாவுல்லாஹ் ஷேக்! மேற்கு வங்கத்தில் காவி மிருகங்களின் அடுத்த அட்டூழியம்! ஜார்க்கண்டில் தப்ரேஸ் அன்சாரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு சில நாட்களே ஆன நிலையில், மேற்கு வங்கத்தில் சனாவுல்லாஹ் ஷேக் என்ற 24 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவரை காவிபயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்துள்ளனர். கல்கத்தாவிலிருந்து 326 கி.மீ தூரத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் தான் காவி வெறிப்பிடித்த கும்பல் ஒன்று இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. சனாவுல்லாஹ் […]

பாலியல் குற்றங்களும் பல்வேறு தண்டனைகளும்.?

பாலியல் குற்றங்களும் பல்வேறு தண்டனைகளும் சமீபத்தில் கோவை துடியலூரில் சிறுமி ரிதன்யஸ்ரீ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களிடத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் பிள்ளைகளை யாரை நம்பித்தான் வெளியே அனுப்புவது? பெண் பிள்ளைகளுக்கு பள்ளிப் படிப்பு தேவைதானா? கல்லூரிகளுக்கு பெண் பிள்ளைகளை ஏன் அனுப்ப வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விக்கணைகள் பெற்றோர்களுக்கும், ஒட்டு மொத்த மக்களுக்கும் எழுந்து கொண்டிருக்கின்றது. மொபைல் ஃபோன்களின் வாயிலாக பெண்கள் ஏமாற்றப்பட்டு மான, மரியாதையையும், […]

திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.!

திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.! திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் அடித்துத் துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் குடும்பத்தார் சரமாரியாக தாக்கும் காட்சி வைரலானதையடுத்து போலீஸார் வழக்கை தாமாகவே முன்வந்து கையிலெடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “என்னை எனது கணவரும், மாமனார் மாமியாரும் அடித்தனர். என்னிடம் அவர்கள் வரதட்சனை கேட்கின்றனர். […]

பேஸ்புக் அறிமுகத்தால் சீரழிந்த பெண்கள்

பேஸ்புக் அறிமுகத்தால் சீரழிந்த பெண்கள் ஆண்ட்ராய்டு போன்களும் சமூக வலைதளங்களும் வந்தாலும் வந்தது, அதன்மூலம் அதிகமதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கின்றார்கள். சமூக வலைதளங்களின் பெருக்கத்தாலும் இணையப் பயன்பாடு அதிகரித்த காரணத்தாலும் ஒரு பக்கம் உலகம் மிக வேகமாகப் பயணம் செய்து வந்தாலும் மற்றொரு புறத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களால் அப்பாவி பெண்களுக்கு ஆசையைக் காட்டி அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசப் […]

கலவரங்கள் + கொலைகள் = பாஜக

கலவரங்கள் + கொலைகள் = பாஜக பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை அமைதிப் பூங்காவான இந்தியாவில் ஏராளமான தாக்குதல்களும், கலவரங்களும், அத்துமீறல்களும் நடந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மதத்தின் பெயராலும், பசு பாதுகாப்பின் பெயராலும் ஏராளமான அத்துமீறல்கள், கலவரங்கள், படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் புள்ளி விவரத்துடன் அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதாக ஹேட் கிரைம் வாட்ச் (பிகிஜிணி சிஸிமிவிணி கீகிஜிசிபி) என்ற அமைப்பு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. 2018 […]

இஸ்லாம் என்றாலே அமைதிதான்: சுஷ்மா பேச்சு

இஸ்லாம் என்றாலே அமைதிதான்: சுஷ்மா பேச்சு இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் கூறுவதை விட முஸ்லிம் அல்லாதவர்கள் சொன்னால் அந்தக் கருத்து நல்ல முறையில் ரீச் ஆகும். அதுவும் இஸ்லாத்தினையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் குறித்து சிலாகித்துச் சொன்னால் அந்தக் கருத்து இன்னும் மக்கள் மத்தியில் மேலோங்கும். இந்தியாவில் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று முழு மூச்சாய் பணியாற்றும் சங் பரிவார சக்திகள்., அரபு நாடுகளுக்குச் செல்லும் போது அப்படியே […]

ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 120

ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 120 புளும்பெரிக் என்ற அமைப்பு ஆரோக்கிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் ஸ்பெயினும், இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும், நான்காவது இடத்தில் ஜப்பானும், ஐந்தாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்த்தும் இடம் பிடித்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடான சீனா, 52-வது இடத்திலும் இலங்கை 66-வது இடத்திலும், வங்கதேசம் 91-வது இடத்திலும், நேபாளம் 110-வது இடத்திலும் வந்துள்ளன. இதில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? 120-வது இடமாகும். மோடி தூய்மை […]

பிக் பாஸ் குடி கெடுக்கும் விஜய் தொ(ல்)லைக்க்காட்சி

பிக் பாஸ் குடி கெடுக்கும் விஜய் தொ(ல்)லைக்க்காட்சி விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி நாட்டு மக்களை ஒழுக்கக்கேட்டின் உச்சிக்கு கொண்டு செல்வதையே தங்களது குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடிப்பது விஜய் டிவிதான். ஒழுக்கம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் வகையில் சின்னஞ்சிறு பிஞ்சுகள் முதல் கிழவிகள் வரைக்கும் ஆபாசத்தில் மூழ்க வித்திடும் அசிங்கங்களை விதைப்பதுதான் விஜய் டிவியின் பிரதான நோக்கம். அந்த வகையில் ஜூனியர் சிங்கர் என்ற அசிங்க நிகழ்ச்சியின் மூலம் சிறுகுழந்தைகளை […]

உயிரைப் பணயம் வைத்து யாத்ரீகர்களைக் காப்பாற்றிய முஸ்லிம் ஓட்டுநர்

உயிரைப் பணயம் வைத்து யாத்ரீகர்களைக் காப்பாற்றிய முஸ்லிம் ஓட்டுநர் கடந்த வாரம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான அமர்நாத் யாத்ரீகர்களை தனி ஒரு நபராக இருந்து தனது உயிரைப் பணயம் வைத்து பாதுகாத்துள்ளார் சலீம் என்ற முஸ்லிம் பேருந்து ஓட்டுநர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 3,388 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த குகைக்கோவிலில் உள்ள பனி லிங்கத்தை வணங்குவதற்காக ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான […]

மூடநம்பிக்கை ஏற்படுத்திய பாதகம்

மூடநம்பிக்கை ஏற்படுத்திய பாதகம் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். ஒரு பேக்கரியில் வேலை செய்யும் இவருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் 19 வயது மூத்த மகனுக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக பல தனியார் மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்றும் குணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாந்த்ரிகம் செய்தால் சரியாகி விடும் என சிலர் சொல்ல, இதை நம்பிய கோவிந்தன் கேரள மாநிலம், நொச்சோடு தரூர் என்ற […]

முஸ்லிம் மன்னர் உருவாக்கிய நகரம்

முஸ்லிம் மன்னர்  உருவாக்கிய நகரம் அஹ்மது ஷா என்பவரால் உருவாக்கப் பட்ட நகரம்தான் அஹ்மதாபாத். குஜராத்தின் தலை நகரமாக விளங்கும் அஹ்மதாபாத்தில் 28 வகையான பழமை மிகுந்த கட்டடங்களும், கலையயம்சமிக்க நூற்றுக் கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இதனைக் கணக்கில் கொண்டு உலகப் பாரம்பரிய மிக்க புராதன நகரங்களின் பட்டியலில் அஹ்மதாபாத்தையும்  யுனெஸ்கோ நிறுவனம் சேர்த்துள்ளது. பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் பிரான்ஸின் பாரிஸ் நகரம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரம், எகிப்தின் கெய்ரோ நகரம், பெல்ஜியத்தின் பிரன்ஸில்ஸ் நகரம், இத்தாலியின் ரோம் […]

மனிதாபிமானத்தில் விஞ்சிய லண்டன் முஸ்லிம்கள்

மனிதாபிமானத்தில் விஞ்சிய லண்டன் முஸ்லிம்கள் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வடக்கு கென்சங்டன் பகுதியில் கிரன்ஃபெல்டவர் என்ற குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்தக் குடியிருப்பில் உள்ள 2-வது தளத்தில் தீ பற்றியதில் தீ ‘மளமள’வெனப் பரவி வளாகத்தையே எரித்து விட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் இறந்து விட்டனர். 74 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப் பட்டனர். அவர்களில் 18 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. இங்கு வசித்தவர்களுக்கு போட்டிருந்த துணியைத் தவிர […]

இதய நோயிலிருந்து காக்கும் திருமணம்

இதய நோயிலிருந்து காக்கும் திருமணம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பால் கார்ட்டர் மற்றும் அஷ்டன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இங்கிலாந்து நாட்டில் உயர்ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். 14 ஆண்டு காலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில் நடந்த இதயநலம் குறித்து நடந்த சர்வதேச மாநாட்டில் அவர்கள் வெளியிட்டனர். அதில் ‘அதிக கொழுப்பு இருந்த 50, 60, 70 வயதான […]

நாய்களால் ஆபத்து: ஆய்வு முடிவுகள்!

நாய்களால் ஆபத்து: ஆய்வு முடிவுகள்! பலரும் நாய்களை தங்களது செல்லப்பிராணிகளாக வளர்த்துக் கொண்டு தங்களது படுக்கையறையில் அதோடு சேர்ந்து தூங்குவது வரையிலான இடத்தை அந்த நாய்களுக்கு வழங்கி வைத்துள்ளனர். நாய்களுக்கு முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொள்பவர்கள் அதிகம். இஸ்லாம் நாய் வளர்ப்பதை தேவைக்கு மட்டுமே அனுமதித் துள்ளது; நாய் இருக்கும் வீடுகளில் அருள் வளத்தை கொண்டு வரும் வானவர்கள் வரமாட்டார்கள் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள். வீட்டின் பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு […]

மிருகவதைத் தடைச் சட்டம் திருத்தமா? திருட்டுத் தனமா?

மிருகவதைத் தடைச் சட்டம் திருத்தமா? திருட்டுத் தனமா? மத்திய பாஜகவின் நான்காம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு வன்கொடுமைச் சட்டமொன்றை நாட்டு மக்களுக்கு பரிசளித்திருக்கிறது மத்திய அரசு. 1960 ஆம் ஆண்டு மிருகவதைத் தடைச் சட்டத்தைத் திருத்தி பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக் கூடாது. விவசாய நோக்கங்களுக்காக, விவசாயிகள் என அரசால் சான்றளிக்கப்பட்டவர்கள் மட்டுமே சந்தைகளைப் பயன்படுத்த வேண்டும். விற்பவர் பெயர், முகவரி மற்றும் அடையாளச் சான்று வைத்திருக்க […]

அற்புதப் பெருவிழா பொய்: நிரூபித்த போப்

அற்புதப் பெருவிழா பொய்: நிரூபித்த போப் மரபணுக் கோளாறு காரணமாக மூளைச் செல்கள் சாவு ஏற்படுகின்றன. இந்த மூளைச்சாவை வழி நடத்துகின்ற நோயை ஹண்டிங்டன்ஸ் என்று அழைக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப் பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரை நேரில் சந்தித்தபோது அவர்களை போப் ஆண்டவர் ஆறுதல் படுத்தித் தேற்றினார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இப்படி போப் ஆண்டவர் ஆறுதல் சொன்னாரே தவிர இவர்களின் நோயை குணமாக்கி விடுவேன் என்றோ, அதற்கான […]

15 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான முஸ்லிம்

15 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான முஸ்லிம் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. அப்போது பீகார் மாநிலம், முஸாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் ‘அஹ்மதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஒரு குண்டு வெடிப்பு நடந்தவுடன் புலனாய்வு செய்து, உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் போலிசாருக்குக் […]

ஆபாசப் படங்களால் சீரழியும் இந்தியா

ஆபாசப் படங்களால் சீரழியும் இந்தியா ஜூ லை 31ஆம் தேதிக்குள் குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதள முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இணையதளங்களை முடக்க கண்காணிப்பு அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 31.07.17ஆம் தேதிக்குள் குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. குழந்தைகள் சார்ந்த ஆபாச […]

பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்கள்

பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற சிந்தனை பாசிச சக்திகளால் திட்டமிட்டு உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. பதினான்கு நூற்றாண்டு காலமாக பல கோடி முஸ்லிம்கள் பின்பற்றும் ஒப்பற்ற தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி இறைத்தூதர் என்ற ஆன்மீகத் தலைமையை ஏற்றதுபோல், மதீனாவை தலைமையாகக் கொண்டு ஆட்சித் தலைமையையும் ஏற்று இருந்தார்கள். ஆட்சிப் பொறுப்பு எனும் போது தனது ஆட்சியின் கீழுள்ள மக்களை […]

உலகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமே ஒரே தீர்வு!

இனவெறி ஒழித்த இஸ்லாம்: உலகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமே ஒரே தீர்வு! தற்போது அமெரிக்காவில் இனவெறி தலைவிரித்து ஆட ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மூன்று இந்தியர்கள் அமெரிக்க இன வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவின் புளோரிடாவில் இந்தியருக்குச் சொந்தமான கடை ஒன்றின்மீது தாக்குதல் குறி வைக்கப்பட்டது, அதாவது 64 வயது ரிச்சர்ட் லாய்ட் என்பவர் இந்தியர் கடைக்கு தீ வைக்க முயன்றார். ‘அராபியர்களை அமெரிக்காவை விட்டு விரட்டுவோம்’ என்று அவர் கூறினார். போலீஸ் சம்பவ இடத்துக்கு […]

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்!

லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணிக்கத் தடை: இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்! ஆபாச ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வருவதுதான் பெண்களுக்கான சுதந்திரம் என்று பலரும் தவறாக நினைத்து வருகின்றார்கள். ஆனால் ஆபாச ஆடை அணிவது பெண்களுக்கு பாதுகாப்பல்ல; அதுதான் அவர்களுக்கு ஆபத்தை வரவழைக்கும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதனால் தான் பெண்கள் ஆபாச ஆடை அணிய இஸ்லாம் தடை விதிக்கின்றது. அதை இப்போதுதான் ஒவ்வொருவராக உணர ஆரம்பித்துள்ளார்கள். லெக்கின்ஸ் அணிந்து வந்த 2 இளம் […]

தொடர்ந்து கருவறுக்கப்படும் தலித் பெண்கள்: தீர்வுதான் என்ன?

தொடர்ந்து கருவறுக்கப்படும் தலித் பெண்கள்: தீர்வுதான் என்ன? தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் தலித் சகோதரிகள் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு ஆளாக்கப்பட்டு கருவறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் நந்தினி என்ற தலித் சகோதரி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்; இதுபோல இந்தியா முழுவதும் தினம் தினம் தலித் பெண்களுக்கு இந்தக் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேடை நாடகம் பார்க்கச் சென்ற […]

வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்த 800 முஸ்லிம் குடும்பங்கள்

வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்த 800 முஸ்லிம் குடும்பங்கள் ஜார்கண்ட் மாநிலம், லத்தேகர் மாவட்டம், புகாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மும்தாஜ் அலி என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தைப் பார்த்து தனது மகன் திருமணத்துக்கு வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுத்தார். மேலும் லடேகர், பலாமு ஆகிய மாவட்டங்களைச் செர்ந்த சுமார் 800 முஸ்லிம் குடும்பத்தினர் தங்கள் மகள் திருமணத்துக்கு வரதட்சணையாக வாங்கிய ரூ6 கோடிக்கும் மேற்பட்ட தொகையை மணமகள் குடும்பத்தினருக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர் […]

மனைவியைக் கொலை செய்து ஜோதிடத்தை பொய் என நிரூபித்த ஜோதிடர்

மனைவியைக் கொலை செய்து ஜோதிடத்தை                                                                                                        […]

சாகடிக்கப்படும் மனித நேயம்!

சாகடிக்கப்படும் மனித நேயம்! விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடக்கூடியவர்களுக்கு உதவி செய்யாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது; அதை தங்களது செல்ஃபோன்களில் படம் பிடிப்பது என்ற கொடூர செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. உயிருக்காகப் பரிதவிப்போருக்கு முதலுதவி செய்யாமல் அவர்களை தங்களது செல்ஃபோன்களில் படம் பிடித்து பலரும் மனிதநேயத்தைக் கொலை செய்து வருகின்றார்கள். அப்படிப்பட்டதொரு கொடுமையான, கொடூரமான மூன்று மனித நேயப் படுகொலைகள் கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்துள்ளது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. […]

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன்தான்!

 கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன்தான்! காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவ்வாறு சொல்வது அவதூறு என்று ஒரு பச்சைப் பொய்யை சங் பரிவார இயக்கங்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா என்பவர், தான் பங்கு பெறும் பேட்டிகளில் எல்லாம் இதே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பார்; இதற்குப் பெயர்தான் கோயபல்ஸ் தத்துவம் என்பது; அதாவது ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் அது […]

சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல்

சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் ஃபலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்கு கரைப் பகுதியின் பெரும் பகுதியை 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. இதுபோல் கிழக்கு ஜெருசலேம் பகுதியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. இந்த இரு ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் 140 குடியிருப்புகளை கட்டி, அங்கு 6 லட்சம் யூதர்களை இஸ்ரேல் குடியமர்த்தியுள்ளது. இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் சர்வதேச சட்டப்படி சட்ட விரோதமானவை. இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு குறித்து இஸ்ரேல் பாராளு மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு […]

காற்றில் பறக்கும் இந்திய அரசின் பாதுகாப்பு!

 காற்றில் பறக்கும் இந்திய அரசின் பாதுகாப்பு! அனைத்தையுமே டிஜிட்டல் மயமாக்கி புதிய இந்தியாவை உருவாக்கப் போகின்றோம் என பீற்றிக் கொள்ளும் மோடியின் சாயம் நாளுக்கு நாள் வெளுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த 12.02.17 ஞாயிற்றுக் கிழமை அன்று மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. 12.02.17 அன்று காலை இந்த இணையதளம் திடீரென முடக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிக்கைகளும், தகவல்களும் வெளியாவதும் அந்த பக்கத்தில்தான் அந்த இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது தேசிய […]

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு காளைகளை ஓடவிட்டு அதை அடக்கி வீரத்தை வெளிப்படுதல் என்று சொல்லி தமிழர்களின் விளையாட்டாக ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டு தமிழகத்தில் விளையாடப்படுகின்றது. இது இஸ்லாமிய அடிப்படையில் கூடுமா? இஸ்லாம் இதை அங்கீகரிக்கின்றதா என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். காரணம் என்னவெனில், ஜல்லிக்கட்டு நடத்துவது கூடும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்துவது கூடாது என்றும் இரண்டு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவ்விரு கருத்துக்களில் எது சரியானது என்று ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஜல்லிக்கட்டு […]

பச்சைக் கிளியும், தூங்கும் சட்டமும்

பச்சைக் கிளியும், தூங்கும் சட்டமும் ஜோஷியம் பார்க்கலையா ஜோஷியம் என தெருவில் கூப்பாடு கேட்கும். விவரம் தெரியாமல் இவர்களிடம் ஜோதிடம் பார்க்க முயன்றால் கூண்டில் அடைக்கப் பட்டுள்ள பச்சைக் கிளியை அவிழ்த்து விடுவார்கள். கழுத்தில் சிவப்பு நிற வளையமும், இறகில் கொஞ்சம் சிவப்பு நிறமும் உள்ள இந்தக் கிளி, வெளியில் வந்து ஜோதிடன் அடுக்கி வைத்துள்ள படங்களைப் புரட்டி, அதில் ஒரு படத்தை எடுத்துக் கொடுக்கும். இந்த வேலைக்கு பரிசாக ஒரு நெல்மணியை கிளிக்கு ஜோதிடன் கொடுப்பான். […]

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறி

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறி அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் 9 கறுப்பினத்தவர்களை படுகொலை செய்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த மேலாதிக்க வெறியர் ஒருவருக்கு கடந்த வாரம் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிறவெறி எந்த அளவிற்கு ஊறிப்போயுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் தக்க சான்று பகர்கின்றது. 9 கறுப்பின மக்களை காட்டு மிராண்டித்தனமாக சுட்டுக் கொலை செய்த டைலன் ரூஃ ப் என்ற இந்த நபர் மீது வெறுப்பு உணர்வினால் புரிந்த குற்றங்கள் உள்பட […]

கோ எஷிகேசனுக்கு தடை விதிக்கப்படுமா?

கோ எஷிகேசனுக்கு தடை விதிக்கப்படுமா? நம்மைச் சுற்றி நடக்கும் படுபயங்கரமான பேராபத்தான விஷயங்களை பல நேரங்களில் நம்மில் பலரும் கண்டு கொள்வதில்லை; ஆனால் அந்தச் செயலானது நம்மை அழித்துவிடும் அளவிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்; அது போன்றதொரு நம்மால் உணரப்படாத தீமைதான் ஆண்களையும், பெண்களையும் இரண்டறக் கலக்கவிடும் அபாயகரமான நிகழ்வுகள். அதில் முதலிடம் வகிப்பது கோ எஜுகேசன் என்ற பேராபத்து. கோ எஜுகேசன் விபரீதம் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களையும், மாணவிகளையும் இரண்டறக் கலந்து அமர வைத்து […]

பிள்ளைகள் கைவிட்டதால் உணவின்றி உயிரிழந்த பெற்றோர்கள்

பிள்ளைகள் கைவிட்டதால் உணவின்றி உயிரிழந்த பெற்றோர்கள் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டால் அவர்களை நோக்கி “சீ” என்று கூற வேண்டாம் என இறைவன், உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனில் தெரிவிக்கின்றான். ஆனால் திருக்குர்ஆனைப் பின்பற்றுவதாகச் சொல்லும் இஸ்லாமியர்களிடத்தில் கூட அந்தப் பண்புகள் இருப்பதில்லை, அவ்வாறு இருந்திருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முதியோர் இல்லம் நடத்துவதற்கு எவ்விதத் தேவையும் இருக்காது. பெற்றோரைப் பேணுவது ஒருவகையான சுமை என நினைக்கும் சிலர் இஸ்லாமியர்களில் இருப்பது போல […]

அப்பாவி பெண்ணை படுகொலை செய்த போலி மந்திரவாதி

அப்பாவி பெண்ணை படுகொலை செய்த போலி மந்திரவாதி கடவுள் பக்தியை நம்பும் அப்பாவி பக்தர்களை தவறான வழியில் அழைத்துச் சென்று அவர்களை நரபலி கொடுக்கும் நிகழ்வுகள் நம் நாட்டில் பல நிகழ்ந்துள்ளன. பக்தியின் பெயரால் பாலியல் மோசடிகள், பண மோசடிகள், கொலைகள் நடந்தாலும் கூட மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்றே சொல்ல வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த வாரம் நடந்துள்ள ஒரு கொடூர கொலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலிச்சாமியார் ஒருவர் தன்னை நம்பி வந்த […]

Next Page » « Previous Page