Tamil Bayan Points

Category: தொழுகை

q110

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா?

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? இணை வைக்கும் இமாம்களுக்குப் பின்னால் மட்டும் தான் நின்று தொழக்கூடாதா..? அல்லது அந்த இமாம் பணி புரியும் பள்ளி வாசலிலேயே தொழக் கூடதா..? தாயத்து போடக் கூடியவரும் அல்லாவிற்கு இணை வைக்கக் கூடியவர் தானே ..? யோகாசனம் கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா டி.எ.முஹம்மது ரஃபி பதில் : இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாது. இது அல்லாத ஏனைய பாவங்களை ஒருவர் செய்தால் அவரைப் பின்பற்றித் […]

மஃமூம் இமாமாக ஆகலாமா?

மஃமூம் இமாமாக ஆகலாமா? கேள்வி : ஒருவர் தாமதமாக ஜமாஅத்தில் வந்து சேருகின்றார். இமாம் ஸலாம் கொடுத்ததும் தமக்குத் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுகின்றார். அதற்குப் பிறகு வரும் ஒருவர் தவறிய ரக்அத்துகளைத் தொழும் இவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவது கூடுமா? ஒரே தொழுகையில் ஒருவர் பின்பற்றித் தொழுபவராகவும், இமாமாகவும் ஆக முடியுமா? பதில் இமாமைப் பின்பற்றித் தொழுகின்ற வரைதான் ஒருவர் பின்பற்றித் தொழுபவராகக் கருதப்படுவார். இமாம் ஸலாம் கொடுத்துவிட்டால் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுபவர் தனியாகத் […]

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா? முஹம்மது ரம்ஸி இருவரது தொழுகையும் வெவ்வேறாக உள்ளதால் இக்கேள்வி எழுகின்றது. இருவருடைய தொழுகையும் ஒரே தொழுகையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இமாமுடைய தொழுகை கடமையானதாகவும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகை நஃபிலாகவும் இருக்கலாம். அது போன்று இமாமுடைய தொழுகை அஸராகவும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகை லுஹராகவும் இருக்கலாம். இவ்வாறு இருவருடைய தொழுகையும் வேறுபடுவதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன. முஆத் (ரலி) அவர்கள் தம் சமுதாயத்தாருக்கு இமாமாக இருந்தார்கள். அவர்கள் நபியவர்களுடன் […]

சில ரக்அத்களில் சப்தமாகவும் சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்?

சில ரக்அத்களில் சப்தமாகவும் சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? சுலைமான் பதில் : ஃபஜர் தொழுகையிலும், மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளிலும் மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத்திலும் இஷாத் தொழுகையின் பிந்திய இரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமின்றி ஓதித் தொழ வைக்க வ். இவ்வாறு சில தொழுகையில் சப்தமிட்டும் சில தொழுகையில் சப்தமின்றியும் ஓதுவதற்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ காரணம் சொல்லப்படவில்லை. பொதுவாக வணக்கம் […]

இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?

இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா? ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என்று […]

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது பதில் கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதிவிலக்குகளும் உள்ளன. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா) நோக்கித் திருப்புங்கள். திருக்குர்ஆன் 2:144 என்று குறிப்பிடும் இறைவன் நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ்வின் திருமுகம் உண்டு (திருக்குர்ஆன் 2:115) எனவும் கூறுகிறான். யாவற்றையும் அறிந்த இறைவனுக்கு, கிப்லாவை நோக்க இயலாத சந்தர்பபங்களும் ஏற்படும் என்பது தெரியும். இது போன்ற சந்தர்ப்பங்களைக் […]

இமாம் இருப்பில் இருக்கும் போது சேர்ந்தால் என்ன ஓத வேண்டும்?

இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது நாம் ஜமாஅத்தில் சேர்ந்தால் என்ன ஓத வேண்டும்? ? இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது நாம் வந்து சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கராப்பள்ளி தொழுகையில் இமாம் என்ன நிலையில் இருக்கின்றாரோ அதே நிலையைத் தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகின்றது.   وَقَدْ […]

இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா?

இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா? ? வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழலாமா? விளக்கவும். ஏ. ஜெஹபர் சாதிக், அதிராம்பட்டிணம் அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி) அவர்கள் குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் […]

ஃபஜ்ரு ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் தொழுதுவிட்டுதான் ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா?

ஃபஜ்ரு ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் தொழுதுவிட்டுதான் ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா? ? ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பள்ளிக்கு வந்தால் முதலில் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் சேர்கின்றார்கள். இது பற்றிக் கேட்டதற்கு இந்த ஹதீஸைக் கூறுகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். ஒரு ஓரமாக நின்று சுன்னத்தைத் தொழுது விட்டு […]

இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா?

இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? ? ஒரு குறிப்பிட்ட நேரத் தொழுகையில் ஒரு ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? விளக்கவும். ஏ.எல். ஹாஸிம், ராஸல் கைமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று […]

முதல் ஜமாஅத்தின் நன்மை இரண்டாம் ஜமாஅதுக்கு உண்டா?

ஜமாஅத் தொழுகை முடிந்த பின் இரண்டாவது ஜமாஅத் நடக்கின்றது. முதல் ஜமாஅத்தில் தொழுவதில் கிடைக்கும் நன்மை இரண்டாவது ஜமாஅத்தில் தொழுதால் கிடைக்குமா? அதிரை அபூஷஹீத் தவ்லத், துபை தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை தரக்கூடியது என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களில் முதல் ஜமாஅத், இரண்டாவது ஜமாஅத் என்று பிரித்துக் கூறப்படாமல் பொதுவாக ஜமாஅத் என்றே கூறப்படுகின்றது. இதை வைத்து முதல் ஜமாஅத்திற்கும், இரண்டாவது ஜமாஅத்திற்கும் நன்மை வித்தியாசம் எதுவும் […]

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்த தொழுகையை தொழவேண்டும்?

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்த தொழுகையை தொழவேண்டும்? ? பயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ வேண்டுமா? ஏ.ஆகிலா பானு, வடகால் அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி), குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, […]

இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா?

இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா? நிஸா, திருவாரூர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து அவர்களுக்கு முட்டுக்காலில் அல்லது புஜத்தில் முறிவு ஏற்பட்டது. ஒரு மாத காலம் தமது மனைவியரிடத்தில் செல்வதில்லை என சத்தியம் செய்து கொண்டார்கள். பேரீச்சை மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பரணில் அமர்ந்தார்கள். அவர்களுடைய தோழர்கள் அவர்களை நோய் விசாரிப்பதற்காக வந்த போது (அந்தப் பரணில்) அமர்ந்தவர்களாகவே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். […]

தொடர் உதிரப்போக்குள்ளவர் தொழுவது எப்படி?

தொடர் உதிரப்போக்குள்ளவர் தொழுவது எப்படி? மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன? ஃபாத்திமா பதில் சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப்போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வு இதுதான். ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் […]

கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா?

கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா? ஃபர்ளான தொழுகையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழலாமா? தொழலாம் என்றால் அவர்கள் எவ்வாறு நிற்க வேண்டும்? ஜெ.ஹிதாயதுல்லாஹ் பதில்: கடமையான தொழுகையை ஆண்கள் பள்ளியில் நிறைவேற்றுவது அவசியம். பள்ளியில் தொழாமல் வீட்டில் தொழுவதை அனுமதிக்கும் காரணங்கள் இருக்கும் போது மட்டும் ஆண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாம். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடமையான தொழுகையைக் கூட்டாகத் தொழலாம். ஆனால் மனைவி கணவனுடன் சேர்ந்து நிற்காமல் கணவனுக்குப் பின்னால் நின்று தொழ […]

லுஹர் அசர் தொழுகைகளில் பெண்கள் சப்தமாக ஓதி தொழுவது ஏன்

  லுஹர் அசர் தொழுகைகளில் பெண்கள் சப்தமாக ஓதி தொழுவது ஏன் பெண்கள் ஜமாஅத்தாகத் தொழும் போது இகாமத் சொல்லாமலும், லுஹர் அஸர் நேர தொழுகைகளை சப்தத்துடன் ஓதியும் தொழுகிறார்கள். இது சரியா? அலாவுதீன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் அசர் ஆகிய இரு தொழுகைகளின் நான்கு ரக்அத்களிலும் சப்தமில்லாமல் தான் ஓதியுள்ளனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழ மார்க்கம் கொடுத்துள்ள அனுமதியை நாம் கொடுத்து இருந்தால் பள்ளிவாசலில் எவ்வாறு […]

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா? நியாஜுத்தீன் பதில் பெண்கள் ஆண்களுக்கு இமாமாக நின்று தொழ வைத்ததாக எந்த ஒரு சம்பவமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறவில்லை. இதற்கு நேரடியான தடை மார்க்கத்தில் சொல்லப்படாவிட்டாலும் சில பொதுவான வசனங்களும், நபிமொழியும் இது கூடாது என்ற கருத்தைக் கொடுக்கின்றது. சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். திருக்குர்ஆன் 4:34 பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் […]

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்? உளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு நாளுக்கு உரியது என்று கூறுகிறார்கள். இது சரியா? பதில் பொதுவாக உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும். ஆனால் காலுறை அணிந்திருப்பவர்களுக்கு இதில் விதிவிலக்கு உள்ளது. கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது […]

பயணத்தில் கஸர் செய்தல்

  பயணத்தில் கஸர் செய்தல் எவ்வளவு தொலைவு பயணம் செய்தால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரகத்களாகத் தொழும் சலுகை உண்டு? எத்தனை நாட்கள் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்? பல வருடங்கள் வெளியூரில் இருப்பவர்கள் இவ்வாறு சுருக்கித் தொழலாமா? ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரகத்களாகத் தொழலாம்.   و حدثناه أبو بكر بن أبي شيبة ومحمد بن بشار كلاهما عن غندر […]

ஜம்வு தொழுகையில் முரண்பாடு ஏன்

ஜம்வு தொழுகையில் முரண்பாடு ஏன் கேள்வி நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளது. இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும் ஒரு இகாமத்தும் கூறி தொழுதார்கள் எனவும் ஹதீஸ் உள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப் போல் தெரிகின்றது. விளக்கம் தேவை. அகபர் தேங்காய்ப்பட்டிணம் பதில் நபிகள் நாயகம் (ஸல்) […]

மழையின்போது ஜம்வு செய்து தொழலாமா?

மழையின்போது ஜம்வு செய்து தொழலாமா? மழை நேரத்தில் மஃக்ரிப் இஷாத் தொழுகைகளை சேர்த்து தொழலாமா? அவ்வாறு சேர்த்துத் தொழும் போது அதை ஜமாஅத்துடன் தான் நிறைவேற்ற வேண்டுமா? ஃபாஹிம் பதில் உள்ளூரில் இருந்தாலும் மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுகலாம். மஃரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுகலாம். பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறியலாம்.   1151و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ […]

இரண்டு தொழுகைகளை முற்படுத்தி ஜம்வு செய்ய ஆதாரம் உண்டா

இரண்டு தொழுகைகளை முற்படுத்தி ஜம்வு செய்ய ஆதாரம் உண்டா? முஹம்மத் ஸபீர் பதில் பயணத்தில் இருப்பவர்கள் இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். இரண்டு தொழுகைகளை இரண்டில் இரண்டாவது தொழுகை நேரத்தில் தொழுவதற்கு ஆதாரம் இருப்பது போல் முதல் தொழுகை நேரத்தில் முற்படுத்தி தொழுவதற்கும் ஆதாரம் உள்ளது. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நண்பகல் வேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது உளூ (அங்கசுத்தி) செய்வதற்காக அவர்களுக்குத் […]

ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா

ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா ஹஜ்ஜு அல்லாத பிரயாண காலங்களில் கடமையான இரு நேரத் தொழுகைகளை இணைத்து முற்படுத்தி ஒரே நேரத்தில் தொழுவதற்கு சரியான ஹதீஸ் உண்டா ?ஹதீஸைக் குறிப்பிடவும் முஹம்மத் ஸபீர் பதில் : ஒருவர் ஹஜ் பயணத்தில் மட்டுமே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழ முடியும். இதைத் தவிர உள்ள மற்ற அனைத்துப் பயணங்களிலும் தொழுகையை நான்காகத் தான் நிறைவேற்ற வேண்டும் என்று ஹனஃபீ மத்ஹப் நூற்களில் […]

சுருக்கித் தொழுவதின் சட்டம் என்ன?

சுருக்கித் தொழுவதின் சட்டம் என்ன? கேள்வி எனது பெயர் பைரோஸ் நான் இலங்கை நாட்டை சேர்தவன் நான் இப்போது கத்தாரில் இருக்கிறேன் எனது கேள்வி இங்கு நான் பயனிகள் தொழுவது போன்று தான் தொழ வேண்டுமா இந்த சட்டத்தை விரிவாக விளக்கவும். பைரோஸ் இலங்கை பதில் : ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம். கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”நபி (ஸல்) […]

இரண்டிரண்டாக தொழுவதா?நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?

இரண்டிரண்டாக தொழுவதா?நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா? லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத் தான் குறிக்குமா? ஜூம்ஆவின் முன் சுன்னத் நான்கு ரக்அத்துகளை எப்படித் தொழ வேண்டும்? லுஹருக்கு முன் உள்ள சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்கள் எனவும், நான்கு ரக்அத்கள் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. லுஹருக்கு முன் […]

ஹாஜத் தொழுகை என்று உள்ளதா? இதில் கலந்து கொள்ளலாமா?

இங்கு (புருனையில்) அமெரிக்காவின் அராஜகத்திற்கு எதிராக ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்கு முன்னும், பின்னும் “ஹாஜத்’ தொழுகை என்று நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுகின்றனர். இந்தத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா? அப்துர் ரஹீம், புருனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ […]

முன் பின் சுன்னத்கள் யாவை?

முன் பின் சுன்னத்கள் யாவை? தொழுகையின் முன், பின் சுன்னத் தொழுகையின் அவசியம் மற்றும் ஒவ்வொரு தொழுகையிலும் எத்தனை ரக்கத் சுன்னதாகத் தொழ வேண்டும். முஹம்மத் ஃபாரூக் பஜ்ருடைய சுன்னத் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) […]

பர்ளு மட்டும் தொழுதால் போதுமா?

பர்ளு மட்டும் தொழுதால் போதுமா? நாம் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றும் போது அவசர வேலையின் காரணமாக பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா? இப்படித் தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா?   حدثنا إسماعيل قال حدثني مالك بن أنس عن عمه أبي سهيل بن مالك عن أبيه أنه سمع طلحة بن عبيد الله يقول جاء رجل إلى رسول الله صلى الله عليه […]

வித்ரு தொழுகை குறித்த இஸ்லாத்தின் சட்டம் என்ன

வித்ரு தொழுகை குறித்த இஸ்லாத்தின் சட்டம் என்ன எஸ்.நிஜாமுத்தீன் பதில் : இஷாத் தொழுகைக்குப் பின்னால் ஃபஜருடைய பாங்கு சொல்லப்படும் வரை இடைப்பட்ட நேரத்தில் ஒற்றைப்படையாக உபரியாக நாம் தொழும் தொழுகைக்கு வித்ருத் தொழுகை என்று கூறப்படுகின்றது. மேலும் இத்தொழுகைக்கு இரவுத்தொழுகை என்றும் கூறப்படுகின்றது. இரவின் கடைசிப் பகுதியில் இத்தொழுகையை தொழுதால் அதற்கு தஹஜ்ஜத் தொழுகை என்று கூறப்படுகின்றது. கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் […]

வித்ரு குனூத்துக்கு ஆமீன் கூறலாமா?

வித்ரு குனூத்துக்கு ஆமீன் கூறலாமா? இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மது ரசூல் பதில் வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : வித்ருடைய குனூத்தில் நான் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன) அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ […]

குனூத் எப்போது ஓதலாம்?

  குனூத் ஓதுவது எந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது? அது யாரைச் சபித்து ஓதுவதற்காக உருவானது? எந்தெந்த தொழுகையில் ஓதலாம்? அதன் வரலாற்று பின்னணி என்ன? குனூத் இரண்டு வகையில் அமைந்துள்ளது. ஒன்று அல்லாஹும்மஹ்தினி ஃபீமன் ஹதைத்த …. என்று துவங்கும் குனூத். இரண்டாவது ஒரு சாராருக்கு ஆதரவாக குனூத்து ஓதுவது அல்லது ஒரு சாராரைச் சபித்து ஓதும் குனூத். இதில் முதலாவது குனூத் தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்தி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரு […]

வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்த மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?

வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்த மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா? ? ஹனபி மத்ஹபினர் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்தி பின்பு கட்டிக் கொண்டு குனூத் ஓதுகின்றார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளதா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கரப்பள்ளி வித்ரு தொழுகையில் ருகூவுக்கு முன்பாகவோ, அல்லது ருகூவுக்குப் பின்போ குனூத் ஓத வேண்டும் என்று வலியுறுத்தி ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு குனூத் ஓதும் […]

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா? இல்லை. பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா? பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் உட்கார்வதற்கோ அல்லது இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்கோ நபிவழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக […]

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா?

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா? பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளதே! இதன் நிலை என்ன? இஸ்மாயில் ஷெரீப், சென்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் […]

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை?

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை? ஹமீத், குவைத் பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்வது தான் நபிவழி என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். 3+3 தக்பீர் சொல்வதற்கு தக்க ஆதாரம் இல்லை எனவும் கூறி வருகிறோம். 3+3 தக்பீர்கள் சொல்வதற்கு ஆதாரம் காட்ட முடியாததால் 7+5 தக்பீர்கள் சொல்வது தொடர்பான ஹதீஸில் சில சில சந்தேகங்களை எழுப்பி அது பலவீனமான செய்தி என்று வாதிட்டு வருகின்றனர். பெருநாள் தொழுகைளில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் […]

தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்?

தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்? தஹஜ்ஜத் தொழுகையை எவ்வாறு தொழுவது? அதில் என்ன சூரா ஓத வேண்டும்? சபீர் கான் பதில் இரவில் இஷாவுக்குப் பிறகு நிறைவேற்றும் தொழுகைகளுக்கு இரவுத் தொழுகை என்று பெயர். இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். இதை நிறைவு செய்யும் போது ஒரு ரக்அத்தைத் தொழுது ஒற்றைப்படையாக முடிக்க வேண்டும். இதனால் இரவுத் தொழுகைக்கு வித்ரு என்ற பெயரும் உள்ளது. இதே தொழுகையை இரவின் இறுதியில் தொழுதால் அதற்கு […]

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? சூரிய கிரகணத்தை காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? பல இடங்களில் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும் கிரகணம் தெரியவில்லை. அங்கு தொழ வேண்டுமா அல்லது காண முடியாததால் தொழக் கூடாதா ? பதில் கிரகணத் தொழுகை எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) […]

மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளுங்கள் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை. என்றாலும் பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை ஏதேம் வரவில்லை. எனவே பெண்கள் மழைத் தொழுகையில் கலந்து கொள்ளலாம். திருக்குர்ஆன். நபிமொழிகளில் பெரும்பாலும் கட்டளைகள் ஆண்களை நோக்கியதாகவே அமைந்திருக்கும். ஆண்களை நோக்கிப் பேசியிருந்தாலும் அந்தக் கட்டளை பெண்களையும் உள்ளடக்கியதே. பெண்களுக்கு அந்த சட்டம் இல்லை என்று நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ சொல்லப்பட்டிருந்தால் மட்டுமே அந்தச் சட்டம் பெண்களுக்கு இல்லை […]

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? சிலர் மிகவும் குண்டாக, தரையில் உட்கார முடியாத நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?   حَدَّثَنَا عَبْدَانُ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ قَالَ حَدَّثَنِي الْحُسَيْنُ الْمُكْتِبُ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلَاةِ فَقَالَ […]

பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா?

பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா? நான் பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறேன். இங்கே உள்ள பள்ளியில் தொழுகை மற்றும் நோன்பு நேரங்களை அவர்கள் வசதிப்படி அமைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, ரமலான் மாதம் கோடையில் வந்தால் எங்களுக்கு மக்ரிப் தொழுகை இரவு பத்து மணிக்கு வரும், இதைக் கணக்கில் கொண்டால் எங்களின் ஒரு நாள் நோன்பின் கால அளவு சுமார் பதினான்கு மணி நேரம், இந்தச் சூழலில் இங்கே உள்ள பள்ளியில் சவூதி […]

தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்தலாமா?

வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா? அபு வபா பதில் : தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு எத்திவைக்கும் பணியை ஒலிபெருக்கி செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய சப்தத்தைச் செவியுற்றால் தான் அவரை சரியாகப் பின்பற்ற முடியும். இமாம் வளல்லால்லீன் என்று கூறினால் பின்னால் தொழுபவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும். இமாம் ஓதுவதை செவிகொடுத்து கேட்க வேண்டும். இமாம் ருகூவிற்குச் சென்றால் […]

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா?

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா? ரமலான் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொழுகையைப் பின்பற்றி பெண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாமா? இம்தியாஸ் நேரடி ஒளிபரப்பாக எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டாலும் அது ஒரு செய்தியாக ஆகுமே தவிர அதில் நம்மையும் இணைக்காது. இதை அறிய பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. மக்காவில் தொழுகை நடக்கும் போது அங்கே மழை பெய்தால் இங்கும் அந்த மழை இருந்தால் அதில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். அங்கே தீவிபத்து நடக்கும் போது […]

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா?

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா? எட்டு வயதுப் பிள்ளை சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கா விட்டால் எழுந்தவுடன் தொழுகச் சொல்லலாமா? பதில் : பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்தவர்கள் மீது தான் கடமை. எட்டு வயதுப் பிள்ளை இது போன்று செய்தால் அத்தொழுகையைத் திரும்ப நிறைவேற்றுவது அதன் மீது கடமையில்லை என்றாலும் இவ்விஷயத்தில் பெரியவர்களைப் போன்று இவர்களைப் பழக்குவதற்காக தொழுகையைத் திரும்ப […]

வேலையின் காரணமாக ஜம்உ செய்யலாமா?

நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கின்றேன். அங்கு அஸர் தொழ முடியாத காரணத்தால் லுஹர் தொழும் போது அஸர் தொழலாமா? பதில் வழக்கமாக்க கூடாது நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103) இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்திலேயே தொழுதாக வேண்டும். தங்களைப் போன்று வேலைக்குச் செல்பவர்களுக்குத் தொழுகையை நிறைவேற்றுவதில் சற்று சிரமம் இருந்தாலும் தொழுகைக்கென ஒரு சிறிய இடைவேளை தான் தேவைப்படும். எந்த அலுவலகமாக இருந்தாலும் டீ […]

கஃபாவிற்குள் தொழலாமா?

கஃபாவிற்குள் தொழலாமா? அப்படி தொழுதால் கிப்லா எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்? பதில் தொழலாம். தற்போது வாய்ப்பு இல்லை. கஅபாவிற்குள் தொழுவதை மார்க்கம் தடைசெய்யவில்லை. மக்கள் குறைவாக இருந்த காலத்தில் கஅபாவின் உட்பகுதி தொழுகை நடத்தப்படும் பள்ளிவாசலாகத் தான் இருந்தது. அதற்குள் மக்கள் தொழுது வந்தனர். கஅபாவிற்குள் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் சிதிலமடைந்த கஅபாவின் அஸ்திவாரத்திலிருந்து சுவர்களை எழுப்பி அதைப் பள்ளியாக ஆக்கினார்கள். நபிகள் நாயகம் […]

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

கடமையான தொழுகை முடிந்த பின் உபரியான தொழுகையைத் தொழுவதாக இருந்தால் அவ்விடத்தை விட்டும் வேறு இடத்துக்கு மாறாமல் அல்லது பேசாமல் தொழக் கூடாது என்று கூறுகிறார்கள். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டா? பதில் : கூடாது. இடம் மாற்றி அல்லது வேறு செயலை செய்து விட்டு தொழலாம். நீங்கள் கூறும் கருத்தில் நபிமொழிகள் உள்ளன. 1463 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ […]

அனைத்துப் பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா?

தொழக் கூடாத பள்ளிகள் என்று குர்ஆனில் கூறப்பட்டதைக் காரணமாக வைத்து அனைத்துப் பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா? பதில் : காரணத்தை பார்த்து முடிவு செய்யவும் குறிப்பிட்ட நான்கு காரணங்கள் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது. وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ […]

ஷிர்க் நடக்கும் பள்ளியில் தொழலாமா?

ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது? பதில் : கூடாது பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ் கூறுகிறான். தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். […]

மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை?

மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை? பதில் ஆயிரம் மடங்கு சிறந்தது மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது. 1190 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ […]

இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா?

? கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? பதில் கூடும். ஒரு நன்மையை இழந்து விடுகின்றோம் கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. தனியாகத் தொழுதாலும் பாங்கு, இகாமத் சொல்லியே தொழ வேண்டும். ஆனால் அதே சமயம் அவை தொழுகையின் ஒரு அம்சம் அல்ல! மறந்த நிலையில் இகாமத் சொல்லாமல் தொழுது விட்டால் தொழுகை கூடும். “தொழுகையின் திறவுகோல் […]

Next Page » « Previous Page